அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !
தெளிவு !
தெளி திறன் இருந்தால் ! தெளிந்த நீரைப் போல ! மாசற்ற கடவுளின் அன்பை போல ! உன் தாயின் நித்சலமான தூய அன்பைப் போல !
என் மிகைபடுத்த முடியாத பேரன்பைப் போல உணர் ! தெளிவாக இரு !
அழுக்கு நீரை குடித்து அமிழ்த நீரை தரும் தென்னையைப் போல துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் பிறர் துயர் களைய நினை !
எதிலும் தெளிவான பாதையை தேர்ந்தெடு !
தெளிவான மன நிலையில் முடிவெடு !
ஒரு வழிப் பாதையில் செல் ! அழைத்து செல்ல என் சத்திய கரங்கள் காத்திருக்கிறது. எல்லாம் உன்னால் முடியும். வலிமையும், வளமையும் உனக்குள்ளே ! நீயே எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ! பனையிலும் , தென்னையிலும், வாழை மரத்தின் உள்ளேயும் அமிழ்த நீர் வைத்தேன் !
நாட்டு வாழை தண்டின் சாறு, சோற்று கற்றாழை சாறோடு சிவப்பு கார் அரிசியில் உள்ள தவிடு கலந்து, பனை வெல்லம் சேர்த்து, மண் சட்டியில் மூன்று மணி நேரம் ஊற வைத்து சாப்பிடு ! உணர்வதற்கு பக்குவம் வரும் !
தர்மம் செய்து பிறருக்கு உதவியாக இருந்து சத்திய பாதையில் நடந்தால் தான் உன்னை தூய்மையாக்க முடியும். நீ எந்த விரதம், உபதேசம், தவம், தியானம் இருந்தாலும் நீ நினைத்த இலக்கை அடைய முடியாது.
தியானம், யோகா என்று சமீப காலமாக புலம்புகிறாய். யாரும் அந்த சக்தியை பயன்படுத்தி கடவுளை பார்த்ததாக, தன்னை உணர்ந்ததாக கூற நான் காணேன். எந்த தூய்மையான நீரும் உன்னை சுத்தப்படுத்தாது. உன் பாவம் தீரும் வரை நீர் உனக்கு நன்மை செய்யாது.
நீர் புணிதம் தான் ! என் கரங்களில் தவழும் நீரால் இறந்த உயிரை கூட திருப்பித் தருவேன் ! என் கரங்கள் சத்தியம், எந்த காரியம், எந்த வழிபாடு செய்தாலும், உன் மனம் ஒருமுகப்படவில்லை என்றால் நீ முழுமையடைய முடியாது.
பெண் முழுமை பெற்றவள். அதனாலே பெண்ணை அறிய முற்படு. போக பொருள் என்று நினைக்காதே ! தியானம், யோகா என்பது என்னை நினைப்பது தான். கடவுள் தான் எல்லா காரியமும் செய்கின்றான் என்பது தான் யோகத்தின் அடிப்படை !
உன் பூஜை முறைகள் எல்லாம் அரை நாழிகை இன்பமாக இருக்குமே தவிர நிரந்தரமான தீர்வை தராது. உன் வழிபாடுகள் , பூஜை, தியானம், யோகம், தவம் எல்லாம் எதற்கும் உதவாது !
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடு ! நீ துன்பப்படவே இந்த யுகம் வந்தாய். ஆனால் உன் துன்பம் துடைக்கும் வழியும் இங்கே உண்டு ! நீ நடனத்தையும், நாட்டியத்தையும் பார்த்து பொய்யனாக வாழ்கின்றாய்.
பொய் உடலுக்கு வேஷம் போடுகிறவனை கடவுள் என்று சொல்லி பாலாபிஷேகம் செய்கிறாய். உழைப்பவன் துன்பத்தோடும், உட்கார்ந்து சுகம் காண்பவன் உழைப்பவனை சுரண்டவும் நான் கண்டேன் ! நான் எல்லாவற்றையும் பொய்த்து போக வைப்பேன்.
விதிக்கு முன்னால் இறக்க வைப்பது உன் கர்மா தான் ! மீண்டும் பிறப்பெடுக்க ஆசை கொள்ளதே !
நீரின் நற்தன்மையை உணர் !
காற்றின் திசை கவனி !
நீரின் திறன் கவனி !
தாவரத்தின் தன்மை கவனி !
தவறுக்கு மன்னிப்பே கிடையாது என் அரசாங்கத்தில் !
உன்னுள்ளே நான் இருக்கின்றேன், நீ உலகமெல்லாம் தேடுகிறாய்.
உன் 333 நாடி நரம்பின் சூட்சுமம் தெரியும் எனக்கு ! எல்லாம் தெரிந்து கொண்டு உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னை அடையாளம் காண உன்னால் முடியாது. தேவர்களுக்கு என் விஷ்வரூபம் தெரியும். உனக்கு தான் என்னை யாரென்று தெரியவில்லை.
உன் மனசு கோட்டை ! உன் புத்தி காவல் ! உன் தெளிவு வெளிச்சம் !
மன சுத்தம் தான் இங்கே தேவை !
உண்மையும், நேர்மையும் தான் தெளிவை தரும் !
மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உனக்கு நீயே கேள். அது தான் தலை சிறந்த உபதேசம் ! குருவும், கடவுளும் உன் தாய் தந்தையுமே ! அவர்களை மண்டியிட்டு வணங்கு. வெட்டி பேச்சிலும், வீண் வார்த்தை ஜாலத்திலும் காலம் கழிக்காதே ! என்னை தோண்டி பார் ! உண்மை புரியும் ! எல்லா நேரத்திலும் மனிதனுக்கும், ஜீவராசிகளுக்கும் தொண்டு செய். இதுவே உன் கர்மா. எப்போதும் சீரான நிலையில் மனதை வை !
ஆசை அகற்றப்படாமல், அனுபவிக்கபடாமல் இருக்க வேண்டும். ஆசை தோன்றியதும் அனுபவம் துவங்கிவிடும். ஆசை முடிந்தவுடன் அனுபவம் மறைந்துவிடும் ! ஆதலால் ஆசை அகற்றினால் போகாது. மறுபடியும் வேறு வழியில் வேறு ரூபத்தில் ஆசை வன்முறையுடன் வரும். அதை உற்று நோக்கு ! எண்ணங்கள் தோன்றும் போதே அதை மறுத்துவிடு ! நினைவுகளை அகற்று. உனக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது.
உன் விதியின் பயனால் உனக்கு கிடைக்க விதி இருந்தாலும் உன் கர்மா அதை தடுக்கும். ஆகவே உன் கர்மா போக பாடுபடு ! நல் குருவை தேர்ந்தெடுத்து உனக்குள் வெளிச்சம் தேடு !
குரு இல்லா வாழ்வில் மலர்ச்சி இல்லை. இங்கே நல் குருவை நான் காணவில்லை. எதிர்பார்த்து சேவை செய்யும் கர்ம குலத்தை நான் பார்த்தேன்.
என் நாமம் உனக்கு தெளிவு தரும் தெளிந்த நீரைப் போல.
தெளி , திறன் இருந்தால் !
அணுவுக்குள் அணுவானவன் இநன்யா !
No comments:
Post a Comment