215 யோகம் !
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம ;;; இநன்யாகடவுளே !
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
யோகம் !
உன் செயல் தான் யோகம் ! கடவுளை நினைப்பதும், அவனை நோக்கி செல்வதும் தான் செயல் ! அதுவே யோகம் ! உன் செய்கை சரியானால் நீ நினைத்த இலக்கு அடைய முடியும் ! அதுவே யோகம் !
யோகம், யோகா என்பது மனதை எப்போதும் கடவுளின் பாதத்தில் வைப்பது தான் ! அதை விடுத்து அசைவற்று செயல் இல்லாமல் தியானம் செய்வதும் அல்லது கை, கால்களை அசைத்து உடலை வளைத்து யோகா செய்வதும் ஒன்றுக்கும் உதவாது ! உழைப்பை மறந்து உடலை வளைக்கின்றான். உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் வேலைக்கு சேவகன் வைத்து கடற்கரையில் மூச்சிரைக்க ஓடி கடமையை மறந்து அலைகின்றான். என்ன பயன் கண்டாயடா ? ஏது உரைப்பேன் உன் செயலை ? ஆனால் இனி நீ உண்ணும் வரை உன்னை விடப்போவதில்லை.
இந்த இநன்யா உன்னை அடித்து திருத்தி கரை சேர்க்கவே இந்த யுகம் வந்தேன். நான் உட்கார்ந்து சுகம் காண இங்கு வரவில்லை ! இராமாயணம், மகாபாரத கதைகள் படித்து, உன்னை அமர வைத்து உபதேசம் செய்ய வரவில்லை. என் செயல்களை பொறுத்திருந்து பார் !
நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கின்றேன். உழைப்பு தான் யோகம் என்று யாருக்கும் தெரியவில்லை. மனதை அடக்காமல் யோகா, தியானம் என்று உடலை அடக்கினால், ஒடுக்கினால் எதுவும் நீ ஆகப்போவதில்லை. இங்கே அறிவை விட ஞானம் தான் உனக்கு முக்தியும், தெளிவும் தரும் ! சொல் இங்கே எதுவும் தேவையில்லை. செயல் தான் உன்னை நிர்ணயிக்கும். இநன்யா யோகம் என்பதை மறவாதே !
பரிவர்த்தணா என் அங்குசபாசத்தில் என்பதை மறவாதே !
விதியின் நாயகன் நான் !
வேத முதல்வன் என் பிரபஞ்ச நாயகன் வள்ளல் பெருந்தகையோன் என் தந்தை யாகவா சொல் கேட்பவன் நான் !
என் தந்தை அமைத்த சத்திய பாதையில் பயணிப்பவன் நான் ! உன்னையும் அழைக்கின்றேன். என் இனிய உறவு நீயடா ! உறங்காமல் உயிர் இருக்க நீ செயல் இல்லாமல் தியானம் என்ற போர்வையில் சிக்கி தவிக்கின்றாய் ! இங்கே செயல் தான் வடிவம் தரும் ! செயல் தான் உன்னை உணரும் பக்குவம் தரும் ! ஆதலால் செயலோடு இரு !
உன் உயிர் செயல் இல்லாமல் இருந்தால் நீ பூஜ்யம் தான் ! ஆதலால் உன் எண்ணத்தை எப்போதும் செயல் வடிவம் பெற உன் லட்சியம், குறிக்கோள் அடைய செயலோடு இரு ! மரங்கள் எப்போதும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அவை லோகத்தின் வேத அலைகளை பூமிக்கு கொண்டு வர பெரிதும் உதவுகின்றது. காற்று எப்போதும் செயல் பட்டுக்கொண்டே இருக்கின்றது ! நீ மட்டுமே மூச்சை பிடித்து நிறுத்தி அசைவற்று மூர்ச்சையாகி போகின்றாய் !
தவம் என்றால் நற்சிந்தனைகளை உருவாக்கி, ஆசையை அடக்கி, ஐம்புலன்களை அடக்குவது தான் ! ஆதிகால முனிவர்கள், சித்தர்கள் தவம் இருந்தார்கள் என்றும், ஒற்றை காலில் நின்று தவம் இருந்தார்கள் என்றும் புலம்புகின்றாய். ஒற்றை காலில் நிற்பது என்பது எண்ணத்தை ஒரே நேர் கோட்டில் வைப்பது தான் என்பதை புரிந்து கொள் !
ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள். அதை நல்லறமாக்கி தம்மை நாடி வந்தவர்களுக்கு அறத்தை போதித்தார்கள். கமண்டலத்தில் நீர் தந்து கவலை போக்கினார்கள். நீ குண்டலத்தில் பயன் என்று கழுத்தில் போட்டு காலத்தில் கவலையோடு இருக்கின்றாய். இக்கால கயவர்கள் இல்லறம் இல்லாது பிரம்மச்சரியம் தான் சிறந்தது என்று உளறக் கண்டேன். ஆதிகால ஏடுகளை எடுத்துப் பார் ! அதை உணரப் பார் !
பிரான்ஸிலும், ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆதிகால ஏடுகள், அரிச்சுவடிகள் இன்னும் மறைந்து இருக்கின்றன. அதை தோண்டி அறியப் பார் ! தஞ்சையிலும், மதுரையிலும் மூழ்கிகிடக்கின்றன. அதை உணரப் பார் !
இங்கே செயலற்று இருந்தால் பிணம் என்று அர்த்தம். செயல் தான் யோகம் என்பதை அறி ! நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். நான் தூங்குவதில்லை. உன்னை எப்போதும் கண்காணிக்கின்றேன். நான் தூங்கினால் லோகம் என்னவாகும் என்பதை யோசி !
சுகம் உன்னை அடக்குவதா அல்லது சுகத்தை நீ அடக்குவதா என்பதை யோசி ! விதை தூங்காமல் எப்போதும் வீரிய நிலையிலேயே இருக்கின்றது. நீ தான் அசைவற்ற பொருளை எல்லாம் உயிர் என்று பிதற்றுகிறாய். உயிர் இல்லா, மயிர் இல்லா, செயல் இல்லா சிலையை வணங்கி மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய்.
நானே செயல், நானே இயக்கம் என்பதை மறவாதே !
நீ செயலோடு இரு ! உனக்கு யோகத்தை தருகிறேன் !
சொல்லும் செயலும் நானே !
நான் இநன்யா !
No comments:
Post a Comment