Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 6, 2016

இநன்யா ;;; யோகம் ! மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே !

215 யோகம் !
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !

இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !

Inanya Maha Munivar 07-07-2016
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
யோகம் !
உன் செயல் தான் யோகம் ! கடவுளை நினைப்பதும், அவனை நோக்கி செல்வதும் தான் செயல் ! அதுவே யோகம் ! உன் செய்கை சரியானால் நீ நினைத்த இலக்கு அடைய முடியும் ! அதுவே யோகம் !
யோகம், யோகா என்பது மனதை எப்போதும் கடவுளின் பாதத்தில் வைப்பது தான் ! அதை விடுத்து அசைவற்று செயல் இல்லாமல் தியானம் செய்வதும் அல்லது கை, கால்களை அசைத்து உடலை வளைத்து யோகா செய்வதும் ஒன்றுக்கும் உதவாது ! உழைப்பை மறந்து உடலை வளைக்கின்றான். உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் வேலைக்கு சேவகன் வைத்து கடற்கரையில் மூச்சிரைக்க ஓடி கடமையை மறந்து அலைகின்றான். என்ன பயன் கண்டாயடா ? ஏது உரைப்பேன் உன் செயலை ? ஆனால் இனி நீ உண்ணும் வரை உன்னை விடப்போவதில்லை.
இந்த இநன்யா உன்னை அடித்து திருத்தி கரை சேர்க்கவே இந்த யுகம் வந்தேன். நான் உட்கார்ந்து சுகம் காண இங்கு வரவில்லை ! இராமாயணம், மகாபாரத கதைகள் படித்து, உன்னை அமர வைத்து உபதேசம் செய்ய வரவில்லை. என் செயல்களை பொறுத்திருந்து பார் !
நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கின்றேன். உழைப்பு தான் யோகம் என்று யாருக்கும் தெரியவில்லை. மனதை அடக்காமல் யோகா, தியானம் என்று உடலை அடக்கினால், ஒடுக்கினால் எதுவும் நீ ஆகப்போவதில்லை. இங்கே அறிவை விட ஞானம் தான் உனக்கு முக்தியும், தெளிவும் தரும் ! சொல் இங்கே எதுவும் தேவையில்லை. செயல் தான் உன்னை நிர்ணயிக்கும். இநன்யா யோகம் என்பதை மறவாதே !
பரிவர்த்தணா என் அங்குசபாசத்தில் என்பதை மறவாதே !
விதியின் நாயகன் நான் !
வேத முதல்வன் என் பிரபஞ்ச நாயகன் வள்ளல் பெருந்தகையோன் என் தந்தை யாகவா சொல் கேட்பவன் நான் !
என் தந்தை அமைத்த சத்திய பாதையில் பயணிப்பவன் நான் ! உன்னையும் அழைக்கின்றேன். என் இனிய உறவு நீயடா ! உறங்காமல் உயிர் இருக்க நீ செயல் இல்லாமல் தியானம் என்ற போர்வையில் சிக்கி தவிக்கின்றாய் ! இங்கே செயல் தான் வடிவம் தரும் ! செயல் தான் உன்னை உணரும் பக்குவம் தரும் ! ஆதலால் செயலோடு இரு !
உன் உயிர் செயல் இல்லாமல் இருந்தால் நீ பூஜ்யம் தான் ! ஆதலால் உன் எண்ணத்தை எப்போதும் செயல் வடிவம் பெற உன் லட்சியம், குறிக்கோள் அடைய செயலோடு இரு ! மரங்கள் எப்போதும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அவை லோகத்தின் வேத அலைகளை பூமிக்கு கொண்டு வர பெரிதும் உதவுகின்றது. காற்று எப்போதும் செயல் பட்டுக்கொண்டே இருக்கின்றது ! நீ மட்டுமே மூச்சை பிடித்து நிறுத்தி அசைவற்று மூர்ச்சையாகி போகின்றாய் !
தவம் என்றால் நற்சிந்தனைகளை உருவாக்கி, ஆசையை அடக்கி, ஐம்புலன்களை அடக்குவது தான் ! ஆதிகால முனிவர்கள், சித்தர்கள் தவம் இருந்தார்கள் என்றும், ஒற்றை காலில் நின்று தவம் இருந்தார்கள் என்றும் புலம்புகின்றாய். ஒற்றை காலில் நிற்பது என்பது எண்ணத்தை ஒரே நேர் கோட்டில் வைப்பது தான் என்பதை புரிந்து கொள் !
ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள். அதை நல்லறமாக்கி தம்மை நாடி வந்தவர்களுக்கு அறத்தை போதித்தார்கள். கமண்டலத்தில் நீர் தந்து கவலை போக்கினார்கள். நீ குண்டலத்தில் பயன் என்று கழுத்தில் போட்டு காலத்தில் கவலையோடு இருக்கின்றாய். இக்கால கயவர்கள் இல்லறம் இல்லாது பிரம்மச்சரியம் தான் சிறந்தது என்று உளறக் கண்டேன். ஆதிகால ஏடுகளை எடுத்துப் பார் ! அதை உணரப் பார் !
பிரான்ஸிலும், ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆதிகால ஏடுகள், அரிச்சுவடிகள் இன்னும் மறைந்து இருக்கின்றன. அதை தோண்டி அறியப் பார் ! தஞ்சையிலும், மதுரையிலும் மூழ்கிகிடக்கின்றன. அதை உணரப் பார் !
இங்கே செயலற்று இருந்தால் பிணம் என்று அர்த்தம். செயல் தான் யோகம் என்பதை அறி ! நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். நான் தூங்குவதில்லை. உன்னை எப்போதும் கண்காணிக்கின்றேன். நான் தூங்கினால் லோகம் என்னவாகும் என்பதை யோசி !
சுகம் உன்னை அடக்குவதா அல்லது சுகத்தை நீ அடக்குவதா என்பதை யோசி ! விதை தூங்காமல் எப்போதும் வீரிய நிலையிலேயே இருக்கின்றது. நீ தான் அசைவற்ற பொருளை எல்லாம் உயிர் என்று பிதற்றுகிறாய். உயிர் இல்லா, மயிர் இல்லா, செயல் இல்லா சிலையை வணங்கி மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய்.
நானே செயல், நானே இயக்கம் என்பதை மறவாதே !
நீ செயலோடு இரு ! உனக்கு யோகத்தை தருகிறேன் !
சொல்லும் செயலும் நானே !
நான் இநன்யா !

No comments:

Post a Comment