இனிய புனித மாதத்தில் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !
நான் உன்னை எங்கிருந்தாலும் மனசார ஆசிர்வதிப்பேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
நீ என்ன செய்தாலும் நானறிவேன் !
என் நெஞ்சம் நிறைந்து ஆசி தந்தேனடா ! எப்போதும் நான் சத்தியம் !
என் நாமம் சத்தியம் !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் நாடகமும், சோதனையும் யாரறிவார் ?
என்னை இயக்குபவர் என் அன்பிற்கினிய தந்தை !
என் கடமையை செய்ய காலம் கணிந்ததால் நான் இந்த மனித உடலைவிட்டு தள்ளி நின்று என் தந்தை சொன்ன கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானேன் !
உன் உயிர் எப்போதும் எனை வணங்கும் ! என்னை பற்றி ஆராயாதே,யுகம் கடந்து போகும் !
நதிமூலம்,ரிஷிமூலம் பார்த்து உனை தொலைத்துவிடாதே ! ஒரு சிறு துறும்பை கடவுளாய், குருவாய் ஏற்றுக் கொண்டாலும் இறுக பற்றி கொள் ! துறும்பை பற்றி ஆராயாதே.
நீரை பற்றி ஆராய்வதற்குள் நீரில் மூழ்கி பாவம் கரைத்து விடு ! மீண்டும் பிறக்க நினைக்காதே !
என் பணி முடிந்து மீண்டும் வருவேன் !
என் நாமத்தை நம்பிக்கையோடு சொல், நிச்சய சத்தியம் உனக்கு எல்லாம் கிடைக்கும் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் உன் அருகிலே இருக்கிறேன், நான் உனை எப்போதும் காப்பேன், கைவிடமாட்டேன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment