Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 6, 2018

கடவுள் மெய்யாகவா ? மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !


to INANYA MAHA MUNIVAR
கடவுள் மெய்யாகவா ?
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
ஆன்மாவின் துடிப்பு, ஒலி தான் கடவுள் ! அறிவதில் பெரிய அறிவு தன்னை யார் என்று அறிவது தான் ! பாவங்களைத் தொலைத்து விடு ! பரம்பொருள் புரியும் ! நாத்தீகம் என்பது புரியாதவனுக்கு வருகின்ற அறிவு. புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது !
கோடி மனித முகத்தை படைத்து, அதில் முகத்தை மட்டும் மாறுபடச் செய்து ஆட்டுவிப்பவனை உணர யுகம் கடந்து போகும் ! நூறு பறவைகளை கூட்டை கட்டவைத்து அதில் தனக்குள்ள கூடு எது என்று புரிய வைத்தவனை நீ புரிந்து கொள்ள கோடி ஜென்மம் ஆகும் !
அவனால் ஒலியால் மலையை வளர வைக்க முடியும். பூகம்பமாய் பூமியை பிளக்க வைக்க முடியும். ஆவேசக் காற்றால் அகங்காரத்தை அழிக்க வைக்க முடியும் ! புனித நீரை புரளச் செய்து பூமியில் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும் ! ஓர் விதையில் ஓராயிரம் கனிகளை தர அவனால் முடியும் ! மனிதனாக பூமியில் பூடகமாக உலாவ முடியும் ! அந்த பேரறிவாளனை புரிய யுகம் கடந்து போகும் ! அவன் இனியவன் ! அன்பில் உயர்ந்தவன் ! அவனை குழந்தையின் சிரிப்பிலே, மலரிலே புரிந்து கொள்ள முயற்சி செய் ! நான் அவனின் பாத மலரைப் பார்ப்பதற்கு எத்தனையோ யுக ஆண்டாக காத்துக் கிடந்தேன் (ஆன்மா) ! என் ஆன்மா எத்தனை முறை சுத்தப்படுத்தப்பட்டது என்பதை காலக் கணக்கு நிர்ணயிக்க முடியாது.
நீ ஒரு சூரியனையும், சந்திரனையுமே கணக்கெடுக்க முடியாதவன் ! நீ கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்னா? எனக் கணக்கெடுக்க முடியாதவன் ! மழையும், சூலும் எப்போது உருவாகும் என உருவாக்கம் தெரியாதவன் நீ ! அவனை அறிய எந்த கருவியில் அளவிட்டு பார்க்கப் போகிறாய் ? அவன் நிகரற்றவன் ! தன்னிகரில்லா கருணைமிக்கவன் ! பழத்தை அழுகவிடுகின்ற என் பிதா (கடவுள்) விதையை அழுக விடுகின்றானா? அவனின் அன்பை உணர்ந்தாயா ? அந்த சூட்சுமதாரியை உணர யுகத்தின் வாழ்வு போதாது ! கருவை வளர்த்து அதற்கொரு கால நிர்ணயம் செய்து பிறக்க வைத்த அந்த பெம்மானை, என்னை பெற்றவனை, அறிய எத்தனை முறை ஆன்மா சுத்தப்படுத்த வேண்டுமென தெரியுமா? உணர்ந்து பார் !
அவன் ஒரு விதையில் கோடி விதையை உருவாக்கியவன் ! இவை அனைத்தையும் உருவாக்கி உனக்கு உண்ண தந்தவனை உணரக் கூட இயலாதவன் நீ ! நீ எங்கே கடவுளை உணரப் போகிறாய் ? நன்றி சொல்லத் தெரியாதவன் நீ ! அவனை நினைக்காமல் தேவையற்றதைப் பேசி விதண்டவாதம் செய்து உன் காலத்தை வீணாக்காதே ! பயன் ஒன்றுமில்லை.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
உன் ஆன்மாவை எப்போதாவது சிரிக்க வைத்தாயா ? ஜாடையாக சிரிக்கிறாய். சக மனிதன் கஷ்டப்பட்டால் சிரிக்கிறாய் ! ஜாடைச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எக்காள சிரிப்பு, நமட்டு சிரிப்பு, இவற்றைத் தான் கற்றுக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறாய் ! நீயும் சிரிக்க மாட்டாய் ! அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கமாட்டாய் !
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் !
கருவறையை பூட்டி சாவி வைத்திருக்கின்றானே ? கடல் அலையை கரை தாண்டி வராமல் மாயம் செய்தானே ! அந்த மாயவனை முதலில் உணரப் பார் ! உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !
மெய் இனியவர் என் அப்பா (யாகவா) !
நான் இநன்யா !

No comments:

Post a Comment