07-06-2018
உன் தாயின் தியாகத்தில் நீ பிறந்தாய். உன் தந்தையின் தியாகத்தில் நீ வளர்ந்தாய். பூமியின் தியாகத்தில் நீ வாழ்ந்தாய். எந்தையின் (கடவுள்) தியாகத்தில் நிம்மதி பெற்றாய். ஏனடா மறந்து போனாய் ?
தியாக உணர்வு ;;;;
நீ செய்த உதவி, தானம், தர்மம், எல்லாவற்றையும் தியாகம் செய் ! தியாக உணர்வோடு இரு ! எதுவும் உன் வசமல்ல ! எதுவும் நீ செய்ததில்லை. எல்லாம் கடவுளின் பொருள் ! பின் ஏன் எல்லாம் எனது என்று மார்தட்டுகிறாய். உன்னை இயக்கும் இயக்குநர் கடவுளே ! நீ ஒரு பொம்மையடா. ஆதலால் நான், எனது பணம், எனது வீடு, எனது உயிர் என்று பிதற்றாதே !
பேசும் நாவெல்லாம் பெறுமகனார் என் தந்தையை (கடவுள்) பற்றி இருக்கட்டும் ! கருணைக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு ! தாய் ஸ்பரிஷம் தான் கடவுள் ! தாயைவிட கோடான கோடி அன்புள்ளவன் கடவுள் என்பதை உணர் !
இருட்டில் (கருவறை) சுகம் தேடினாய், சுகம் கிடைத்தது ! என்னோடு ஆனந்தமாக பேசி கொண்டிருந்தாய். ஆனால் வெளிச்சத்தில் (பிறப்பு) சுகம் காணாது என்னை மறந்து போனாய் ! உன்னையும் மறந்து போனாய்.
நான் மனம் வழி நடப்பவனல்ல ! ஆத்ம வழி நடப்பவன் ! நான் பூமியில் உணர்ந்தது பன்னிரண்டு வயதில் ! நோக்கத்தை தேடி போகும் பொழுது தான் உன்னை அறிகின்றாய். நல்ல நோக்கம் தான் உன்னை தெளிய வைக்கும் !
உன் தாயின் தியாகத்தால் தான் நீ பிறந்தாய் ! கண்ணீர் மல்க கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு உன்னை பெற்றெடுத்தாள் ! பூமியில் உயர்ந்தது பெண்மை தான் ! உன் தாய் தந்தைக்கு கடமையை செய்தாலே போதும் ! கடவுள் உன் வாயில் தேடி வருவான். விலாசம் இல்லா வாழ்வை மேதவிலாசம் அறிய வைப்பான்.
யாகம் (யாக பிரபஞ்சம்) தியாகம் செய்யாவிட்டால் மழை ஏது ? ஒளி ஏது ? யாக பிரபஞ்சமே படைப்பின் சூட்சுமம் ! யாக போரொளியே இங்கே ஆட்டும் விற்பன்னன் !
யாகத்தில் நான் ஆனந்தமாக விளையாடி வருகிறேன் ! நான் என் தந்தை தாயோடு ஆனந்தமாக உலாவி வருகிறேன் ! என் அன்னை தந்தை இருக்குமிடம் சொர்க்கம் ! உன்னையும் அழைத்து செல்வேன், உன் சுட்டு விரல் பிடித்து !
“நீ ஒழுக்கத்தோடு இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் என்று” என் அன்பினிற்கினிய தந்தை சொல்வார்கள். என் தந்தையின் தியாகம் நான் பூமியிலே ! நீ தர்மவான் தான், என் மனித சரீரம் பார்க்க ! என்னை பார்த்து உன் கஷ்டம் போவது என் தந்தையின் தியாகம் தான் !
நான் எப்போதும் தியாக உணர்வோடு இருக்கின்றேன் ! தன்னலமற்று வாழ்ந்து உனை கைபிடித்து அழைத்து செல்ல காத்திருக்கிறேன் ! அதற்கு நீ எல்லாவற்றையும் தியாகம் செய் !நிம்மதி, ஆனந்தம் எல்லை இல்லாது உனக்கு !
தியாகத்தின் தவப்புதல்வன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment