to INANYA MAHA MUNIVAR
14-06-2018
வட்டம் ;;;
கடுகை கோடியாக பிரித்து, கோடியில் ஒன்றை கோடியாக பிரித்த அணுவுக்குள் அணு நீயடா ! நீ தான் வட்டம் என்று நினைத்து வசமிழந்து போகிறாய் ! நீ சிறு புள்ளி என்பதை அறிந்தால் ஆடமாட்டாய் ! ஆளும் மன்னன் எல்லாம் உலகே தன் வசம் என்றும், தான் தான் உலகம் என்றும் இறுமாப்போடு வாழ்கின்றான்.
ஒரு சிறு தலைவலி தாங்க முடியாத சரீரத்தை வைத்து பிதற்றுகிறான். உனக்குள் வரும் நோயை உன்னால் தீர்க்க முடியும் என்றால் நீ கடவுளை நெருங்கி கொண்டிருக்கின்றாய்.
கடவுள் என்ற வட்டத்தில் சிறு புள்ளியாய் சேர போகிறாய் என அர்த்தம். நீ எங்கு தொடங்கினாயோ அதே இடத்தில் மீண்டும் வந்து இணைகிறாய் என்பதை புரிந்து கொள்.
அறிவால் கடவுளை உணர முடியவில்லை என்றால் பகுத்தறிவாதி என உளர்கின்றான். வாழ்க்கை என்ற பூஜ்ஜியத்துக்குள் என்னவென்று தெரியாமலே வீழ்கின்றான். ஒரு துளி நீரிலே வந்தவன் நீ ! உன் வளர்ச்சி எதை நோக்கி ?
சக மனிதனை அழிப்பது, அடக்குவது வளர்ச்சி அல்ல ! மனித மனம் ஆனந்திப்பதே இங்கே வளர்ச்சி !
மிருகங்கள், பறவைகளின் செறிவூட்டல் அன்பை தருகிறது. இவன் விஷத்தை ஊட்டுகின்றான். எல்லாவற்றிலும் பொய், கலப்படம் மற்றும் காண்பவை எல்லாம் தீமை தான், ஏனடா ? எப்படி இந்த மனம் உன்னில் புகுந்தது. நீ வகுத்த நீதி, சட்டம் எல்லாம் பொய்த்துப் போக போகிறது. பொய்யானவன் புலம்புகின்றான். புதிராய் உள் இருப்பவன் சிரிக்கின்றான் !
எனக்குள் புள்ளியாய் மறைகின்றாய். நான் அகண்டமாய் விரிகின்றேன் என்பதை புரியாமல் ! விதவிதமாய் சருகுகளையும், பழங்களையும், அழகையும் படைத்தது நீ வாழ்வதற்காக அல்ல ! உன் கர்மத்தை கழிக்க உடல் வளர்ப்பதற்காக ! படைப்பின் விநோதம் அறிந்தால் பாசத்திற்கு வந்துவிடுவாய் !
ஈனில் நானிருந்து ஆனந்த நிலையில் உன்னோடு விளையாடுகின்றேன். ஈன ஜாதி மானுடன் உணராமல் இருப்பது ஏனோ ?
உணர் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment