Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, November 27, 2018

இராஜயோகம் Written by குருஜி


இராஜயோகம்

Written by 

                                   ஓம்சிவாயநமக!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து என்பணியை
உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
0=0=0=0=0=0

பொது:

வாழ்வின் வெற்றிக்கு மகிழ்வு ஓர் காரணம். மகிழ்ச்சிக்கு உடல்நலம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தாக்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை. 
மனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்புக்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது.
நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத்தொடங்கியது. நோய்க்கு தவறான உணவுப் பழக்கம், அவனின் வாழ்க்கை முறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் அதை மிகப்படுத்த உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.
இதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது.
நோய்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ள உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு உடற் பயிற்சியைவிட ஆசனப்(யோகா) பயிற்சி சிறந்தது. கண்ணுக்குத் தெரியா உள் உறுப்புகள் இயக்கமடைந்து பலன் தரும். ஆசன, யோக பயிற்சிகளினால் தைராய்ட், சோற்றுப்பை, பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மற்ற உருப்புகள் எல்லாம் முழுவதும் இயக்கமடைந்து பலனடைகிறது. இரத்தக்குழாய்களில் கூடுதல் பிராணன் செல்வதால் எல்லா உறுப்புகளுக்கும் தடையில்லா இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. முதுகுத்தண்டு எல்லா நிலைகளிலும் வளைந்து செயல்பட்டு அதை ஒட்டியுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மனக்கட்டுப்பாடு வளரும். உணவு கட்டுப்பாடு தன்னால் ஏற்படும்.
உலக ஆத்மாக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்த வாழ்வு வாழவேண்டும் என்பதே குருஜியின் எண்ணம். ஒரு மனிதன் ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழ்திடில் அவனைச் சுற்றியுள்ள சுற்றமும் ஆனந்தத்தில் திளைக்கும். ஆகவே எல்லா ஆன்மாக்களும் இந்த தேக, ஆசன, யோக முறைகளைப் பயிற்சி செய்து ஆரோக்கிய ஆனந்த வாழ்வு வாழ்ந்திடுவீர். அதைத் தருவது  “இராஜயோகம்“ 
கருத்து வேற்றுமைகளால் ஏற்படும் இறுக்கம், விறைப்பு (Tension), எளிதில் கலவரமடைந்து சஞ்சலத்தினால் ஏற்படும் பயம், நடுக்கம் (Nervous strain), உணர்ச்சிமிக்க மனவெழுச்சிகளினால் ஏற்படும் தீவிர உணர்ச்சிகள் (Emotional disturbances)போதுமான தூக்கம், உறக்கம் இல்லாதிருத்தல் (Sleeplessness), சந்தி, நிம்மதி, அமைதியில்லாதிருத்தல் (Peacelessness) ஆகியவைகளிலிருந்து தப்பிக்க, விடுபட தங்களது கவனத்தை, மனதை “யோகா” வின் பக்கம் மக்கள் திரும்புகின்றனர். 
வந்தபின் நாடுவதைவிட வருமுன் காப்பது என்ற அடிப்படையில் அனைவரும் ”யோகா” கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். “யோகா” என்பது அறிவு புகட்டும், ஞானம் உபதேசிக்கக்கூடிய ஒரு அமைதியான ஒழுங்கீனமில்லா வழி முறைகளைக் கொண்ட கலை.எந்த ஒரு மனிதனும் தொடர் யோகா பயிற்சிகள் மூலம் நிலைபெற்ற அமைதி, முக்தி, எப்போதும் சந்தோஷத்துடன் கூடிய புனிதமான வாழ்வு, ஜீவன் முக்தி அடைய வாய்ப்புகள் உண்டு. ‘யோகா’ என்றால் இனைப்பு, தொடர்பு, சம்பந்தம் என்றாகும். பரிசுத்தமான ஆன்மீக நிலையில் சொன்னால் மனதிற்கும், உள்மனதிற்கும் உள்ள ஐக்கியமான ஒர் ஒற்றுமை வளையமாகும்.
நம்மில் பலருக்கு இந்த இனைப்பு வளையம் உடைந்து, செயலில்லா தொடர்பில்லா நிலையில் உள்ளது. முதலில் அந்த புனித தொடர்பை மீண்டும் ஏற்படுத்த முனைய வேண்டும். நாம் இறைவனின் அணுக்கள். அவனின் குழந்தைகள். எப்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் அது தந்தையின் உறவாகிறதோ, பின் வளர்ந்தபின் வாழ்வின் அனுபவங்களை தந்தையின் மூலம் தெரிந்து புரிந்து செயல்பட நாடுகின்றதோ, அதுபோல நாமும் இறைவனிடம் நம் உறவை மேம்படுத்த வேண்டும். ஒன்ற வேண்டும். யோகத்தின் உதவியோடு நமது மனம், உள்மனம் இறையின் அருளைப் பெறமுடியும். 
இறைபற்றிய ஞான அறிவு, அந்த அறிவின்மேல் முழுநம்பிக்கை, மனதளவில் எப்போதும் அதை நிலை நிறுத்துவது என்ற மூன்றின் அடிப்படையைக் கொண்டு நமது உள்மனதை யோகம் இயக்க முடியும். நாம் இறையின்மேல் கொண்ட அன்பை, யோகமானது தொடர்ச்சியான தியானம், மாசு மருவற்ற மயக்கத்தை, புனிதமான, முழுமையான அர்ப்பணிப்பை தருகின்றது. ‘யோகா’வின் புரிந்து கொள்ளும் சக்தி மனதிற்கு தோழமையானது.‘யோகா’விற்காக மந்திரங்களையோ, ஜபங்களையோ திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைக்க வேண்டியதில்லை. ‘யோகா’ என்பது மனித மனதில் தூய்மையான ஒருமுனைப்படுத்தும் ஒரு செயலாகும். இறை தானே செய்ததும், எல்லோரும் எந்த முறையையும் சார்ந்திராமல் கற்றுக்கொள்ள உதவுவதும் “இராஜயோகம்” ஆகும். 
இறையை தந்தையாக நினை. அதுதான் உண்மை. ஒரு குழந்தை தன் தந்தையை நினைப்பதுபோல இறை உன்மனதில் எப்போதும் இருப்பார். இறை ஒளி மயமானவர். இறையின் ஒளி வடிவத்தைக்காண ‘யோகம்’ உதவி புரியும். இதற்கு பிரமச்சாரியம் அதிகமான உதவியுடன் கூடியதாக இருக்கும். “இராஜயோக”ப் பயிற்சியினால் மன அழுத்தம் ஏற்படாமலிருக்கும். மன அமைதி கிட்டும். புனிதத் தன்மை வந்தடையும். வாழ்வு சீராகும். உடல் தளர்ச்சி அடையாது. உயிர்களுக்கு வழிகாட்டக்கூடிய மேலான நிலையை அடைய சிறந்த வழிகாட்டக்கூடிய ஞானம் பெறுவர். எல்லோருக்கும் வழிகாட்டக்கூடிய உதாரண புருஷன், ஆத்மா ஆவீர்.
நமது அறிவிற்கு ஆதாரம் அனுபவமே. தெரிந்ததைக்கொண்டு தெரியாததைக் கிரகிக்கும் அனுமான ஞானத்திற்கும் அனுபவமே அடிப்படையாகும். உலகின் சமயங்கள் எல்லாம் சாஸ்திரங்களை உடையவை. அஃதன்றி தோன்றிய சமயங்கள் நாளடைவில் மறைந்து விட்டது. சமயங்களின் சமயவாதிகள் உண்மைகளை அனுபவித்து அதை உபயோகித்தார்கள். நம் அறிவின் பலத்தின் அடிப்படையாகிய அனுபவத்தின் பேரில் சமயங்கள் அமைக்கப்பட்டன. சாஸ்திரங்களை உருவாக்கினர். உபதேசங்கள் செய்தவர்கள் கடவுளைக் கண்டனர். தங்கள் ஆன்மாவைக் கண்டனர். எதிர் காலத்தை, தங்களின் அமர வாழ்க்கையை உணர்ந்தனர். தாங்கள் கண்டதை உபதேசித்தனர்.
சமய மதங்கள் முன்னோர்களின் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒரு சமயத்தை பின்பற்ற நினைக்கும் ஒருவன் அந்த அனுபவத்தை உணர்ந்தால்தான் அந்த சமயத்தை முழுமையாக பின்பற்றமுடியும். இந்த அனுபவங்களை அடையும் வழியைப் புகட்டுவது யோக சாஸ்திரமாகும். ஆன்மீக விடுதலை அடைவதைக் குறிக்கோளாக கொண்டுள்ள முறைகளுக்கு ‘யோக’முறைகள்தான் சிறந்த வழிகாட்டி.
யோகமுறைகளை ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அனைவரும், இதுதானே எனக்குத்தெரியும் என்ற நினைவில் செய்ய முயன்றால் அது ஆபத்தில் போய் முடியும். ஒரு குருவுடைய நேரடித் தொடர்பில்தான் ஆபத்தின்றி நன்கு பயின்றிட முடியும் என்ற எச்சரிக்கையை இங்கு நினைவுபடுத்த விருப்புகின்றேன். ஆன்மாவை உணராத நிலையில் அது தன்னிடம் இருக்கின்றது என ஒருவனால் எப்படி உரிமையுடன் சொல்லமுடியும். இறைவன் இருந்தால் நாம் அவரைக்காண வேண்டும். ஆண்டவனிடத்தில் நம்பிக்கை வைத்தால் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், ஒழுக்கம் நிரம்பப் பெற்றவர்களாக ஆக வாய்ப்புண்டு எனச் சொல்பவரின் பேச்சை நம்பியவர்கள் எத்தனைக் காலம் நல்லவர்களாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் இருப்பர் எனக் கூறமுடியும். மணிதனுக்கு உண்மை வேண்டும். அவன் அறிவிற்கு அது புலப்படவேண்டும். ஒவ்வொரு சாஸ்திரத்தையும் கற்கத் தனித்தனி முறைகளை கையாளவேண்டும். மனித அறிவிற்குப் புலப்பட்டு உணர்ந்து அனுபவத்தில் அடைவதற்குரிய செயல் முறைகளைத் தருவது “இராஜயோகம்” என்ற சாஸ்திரமாகும்.
பரிசுத்தமான சுயநலமில்லாத உலகின்வாழ் மக்களுக்கு நன்மை புரியும் நோக்கத்தில் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களை முழு நம்பிக்கையுடன் முயன்று செயல் முறைகளைக் கையாண்டால் உண்மைகளைப் பற்றிய ஞானம் தெரியவரும். புற உலகின் உண்மைகளை நமது புலன்களாகிய கருவிகளால் அடைகின்றோம். அக உலகைப் பற்றி அறிவதற்குரிய சாதனங்கள் நம்மிடம் இல்லை. அகத்தில் தோன்றும் எண்ணங்கள், விவரங்கள், மனம் பற்றிய உண்மைகளை அறிந்து ஆராய நாம் ‘இராஜயோக’ முறை சாஸ்திரத்தை பயன்படுத்துவது சிறப்பு. மனத்தை அளக்க, அதன் சிறப்பை புரிந்து கொள்ள மனம்தான் உதவி செய்ய வேண்டும். நம்மின் கூர்ந்து நோக்கும் சக்தியை உட்புறமாக திருப்பினால் மனம்பற்றிய உண்மைகள் புலனாகும். சிதறிய ஒளிக்கிரணங்கள் போன்ற மனிதனின் வலிமையான சக்திமிக்க ஆற்றல்களை ஒன்றுபடச் செய்தால் ஒளிபிறக்கும். அதுவே சக்தி ஒளி. சக்தி ஒளியைக்கண்டவன் என்றுமே அழியாத தூய்மையான ஓர் பொருளை நேருக்கு நேர் காண்கின்றான். அதன்பின் துயரமில்லை, துன்பமில்லை, நிறைவேறாத ஆசையும் பயமும்தான் துன்பங்களுக்கு காரணம். தனக்கு மரணமில்லை, தான் பூரணன் என்று அறிந்த கொண்ட அந்த உயிர்க்கு வீண் ஆசைகள் எழாது. அதாலால் துன்பமில்லை. பரிபூரண ஆனந்தம் ஏற்படும்.
ஞானம் பெற ஒரே வழி மனத்தை ஒரு முகப்படுத்துதலே. ஒருமுகப்படுத்திய மனதினால் ஊடுருவினால் உலகத்தின் இரகசியங்கள் தெரியவரும். ஊடுருவலின் வலிமையும் சக்தியும் வேகமும் மனதைக் குவிப்பதால் கிடைக்கும். மனதின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. எந்த அளவிற்கு மனம் குவிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு ஆற்றல் அதிகமாகும். காரிருளில் கதிரவன் கதிர்கள் பாய்ந்தால் மறைப்பொருள்கள் தெரிவது போல குவிந்துள்ள மனம் தனது இரகசியங்களை வெளிப்படுத்தும்.‘இராஜயோக’ப் பயிற்சிக்கு குருட்டு நம்பிக்கைத் தேவையில்லை. ஆராய்ந்து உண்மைகளை கண்டபின் நம்பிக்கை வையுங்கள். செயல்படுங்கள். அதற்குமுன் எதையும் நம்பாதீர்கள் என்பதுதான் ‘இராஜயோகம்’.
‘இராஜயோகம்’ கற்க நீடித்த பயிற்சியும், காலமும் வேண்டும். ஒரு பகுதி பயிற்சி உடலையும், மீதிப் பகுதி பயிற்சி மனதையும் சார்ந்தது. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த உடல் சார்ந்த உதவிகள் வேண்டும். உடலை அடக்கியபின் மனதை வயப்படுத்தி ஆற்றல்களைக் குவித்து ஒருமுகமாக்கி நம் ஆணைகளை நிறைவேறச் செய்ய முடியும். சூட்சம தோற்றம்- சூட்சமமான உணர்வுகளைப் பெறும் ஆற்றல்- காரணம் எனலாம். தூல தோற்றம்- காரியங்கள் புலன்களால் உணரக்கூடியது- காரியம் எனலாம். “நுண்ணிய அகவுலகின் தூல வடிவமே புற உலகமாகும்.” அக உலகு சூட்சமமானது, அதுவே காரணமாகும். புற உலகு தூலமாக இருப்பது- அதுவே காரியமாகும். அகத்தின் நுண்ணிய சக்திகளே புறத்தில் தூல சக்திகளாக இருக்கின்றது. அகத்தின் சக்திகளை வழிப்படுத்த தெரிந்து கொண்டால் புறத்தில் உள்ள இயற்கை முழுவதையும் தன் வயப்படுத்தமுடியும். 
இயற்கையின் விதிகள் தன்னை தாக்காது அவற்றிற்கு அப்பால் இருக்கும் நிலையை அடைவது ஒரு யோகியின் விருப்பமாகும். மனித இனமுன்னேற்றம், நாகரீகம் ஆகியவை மனிதன் இயற்கையை வெற்றி கொள்வதைத்தான் குறிக்கின்றது. ஒவ்வோர் ஆன்மாவும் உள்நிறைந்த தெய்வத் தன்மையுடையதுதான். உள்ளும் புறமும் நிறைந்திருக்கும் இயற்கையை அடக்கி, உள்ளே உள்ள தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதே ‘இராஜயோகத்தின்’ நோக்கமாகும்.

No comments:

Post a Comment