Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 7, 2021

கீதைப் பதிவு அத்தியாயம் 10 விபூதி யோகம்

  

கீதைப் பதிவு அத்தியாயம் 10 விபூதி யோகம்

ஸ்ரீபகவான் சொன்னது.

பாகுபலசாலீ,மேலாம் எம்மொழியை மீண்டும் கேளாய்;கேள்வியில் உவகையுடைய உனது நலம் கருதி அதை நான் நவிலுகிறேன்.(1)

வானவர் கூட்டங்களும் மாமுனிவரும் என் உற்பத்தியை உணரார். ஏனென்றால் வானவர்க்கும் மாமுனிவர்க்கும் முற்றிலும் முதற்காரணம் நானே(2)

ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகுக்குத் தலைவன் என்றுமென்னை அறிகிறவன் மானிடருள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்கள் அனைத்தில் இருந்தும்  விடுபடுகிறான்.(3)

புத்தி ஞானம் மயக்கமின்மை, பொறுமை, சத்தியம்,அடக்கம், அமைதி, இன்பம் துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மன நடுவு,திருப்தி .தபசு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி, ஆகிய பலவித பாங்குகள்,உயிர்களுக்கு என்னிடத்திருந்தே உண்டாகின்றன.(4,5)

மஹரிஷிகள் எழுவரும், முன்னை மனுக்கள் நால்வரும் என் ப்ரபாவத்தோடு என் மனதில் உதித்தார்கள்.உலகில் உயிர்கள் யாவும் அவர்களிடத்து இருந்து வந்தவைகள்.(6)( ஏழு ரிஷிகள்= பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர்.—நான்கு மனுக்கள்=சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்)

எனது விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி அறிகிறவன் அசையாத யோகத்தைச் சார்ந்திடுவான். இதில் சந்தேகமில்லை.(7) (விபூதிகள்= விரிவுகள்.)

நான் அனைத்திற்கும் பிறப்பிடம் யாவும் என்னிடத்திருந்தே விரிகின்றன. இதை அறியும் ஞானிகள் என்னை அன்புடன் வழுத்துகின்றனர்.(8)

சித்தத்தை என்பால் வைத்து, உயிரை எனக்குரியதாக்கி, ஒருவர்க்கொருவர் என்னை விளக்கிக் கொண்டும், யாண்டும் என்னைப் புகழ்ந்து பேசியும் , மன நிறைவை யடைந்தும் மகிழ்வடைந்தும் இருக்கின்றனர்.(9)

என்றும் யோக முயற்சியோடு அன்புடன் என்னை வழுத்துபவர்களுக்கு புத்தி யோகம் வழங்குகிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்(10)

நான் அவர்களுக்கு அருளால் இரங்கி, அந்தக் கரணத்தில் வீற்றிருந்து, மெய்ஞானச் சுடர் விளக்கால் அக்ஞானத்துதித்த ஆரிருளை அகற்றி விடுகிறேன்(11)

அர்ஜுனன் சொன்னது

மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர்.எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அப்படியே அஸிதர்,தேவலர் வியாசர், ஆகியவரும் உம்மை நித்தியமானவன், திவ்ய புருஷன், ஆதி தேவன், பிறவாதவன், எங்கும் நிறை பொருள் என்று இயம்புகின்றனர். தாமும் அப்படியே பகர்கின்றீர்,(12,13)

கேசவா, நீர் எனக்கு ஓதுவது யாவும் உண்மை என்றெண்ணுகிறேன்.பகவானே உமது தோற்றத்தைத் தேவர்களும் அறியார், தானவர்களும் அறியார்,(!4)

புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவா, உயிகளுக்கு இறைவா, தேவ தேவா, அண்ட நாயகனே, உம்மை உம்மால் நீரே உள்ளபடி அறிவீர்(15)

எந்த விபூதிகளைக் கொண்டு இவ்வுலகங்களை நிரப்பி உள்ளீரோ, மேலாம் அவ்விபூதிகளை மிச்சமின்றி நீரே வர்ணித்தருள்க.(16)

யோகீ, யாண்டும் உம்மையே சிந்தித்து நான் உம்மை அறிவது எப்படி? பகவானே என்னென்ன பாங்குகளில் நீர் என்னால் சிந்திக்கத் தக்கவர்,?(17)

ஜனார்த்தனா, உமது யோகத்தையும், விபூதியையும், மீண்டும் விரித்து விளக்குவீராக. ஏனென்றால் உமது அமுத மொழி எனக்குத் தெவிட்ட வில்லை.(18)

ஸ்ரீ பகவான் சொன்னது

நல்லது, குருகுலப் பேராளா, என் மேலாம் மஹிமைகளில் முக்கியமானவைகளை உனக்கு மொழிகிறேன்.ஏனெனில் என் விபூதியின் விஸ்தரிப்புக்கு ஒரு முடிவில்லை.(19)

விழிப்புடையோய், எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20)

ஆதித்தியர்களுள் நான் விஷ்ணு. ஒளிர்பவைகளுள் கதிர் நிறைந்த ஞாயிறு நான். மருத்துக்களுள் மரீசி, நட்சத்திரங்களுள் சந்திரன்.(21)

வேதங்களுள் நான் ஸாமவேதம், தேவர்களுள் இந்திரன், இந்திரியங்களுள் மனதும், உயிர்களில் உணர்வும் நானே.(22)

ருத்திரர்களுள் சங்கரனாகவும், யக்ஷரக்ஷசர்களுள் குபேரனாகவும், வஸுக்களுள் அக்னியாகவும், மலைகளுள் மேரு மலையாகவும் நான் இருக்கிறேன்,(23)

பார்த்தா, புரோகிதர்களுள் முக்கியமான பிருகஸ்பதி நான் என்று அறிக. சேனைத்தலைவர்களுள் நான் முருகக்கடவுள்.நீர்நிலைகளுள் நான் கடல்(24)

மஹரிஷிகளுள் நான் பிருகு, வாக்குகளுள் ஓரெழுத்தாகிய பிரணவம் நான், யக்ஞங்களுள் நான் ஜப யக்ஞம். ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்.(25)

மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரச மரம், தேவரிஷிகளுள் நான் நாரதர், கந்தர்வர்களுள் சித்திரரதன், சித்தர்களுள் நான் கபில முனி. (26)

குதிரைகளுள் அமிர்தத்துடன் உண்டான உச்சைசிரவஸ் என்றும், யானைகளுள் ஐராவதம் என்றும், மக்களுள் வேந்தன் என்றும் என்னை அறிக,(27)

ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம், பசுக்களுள் காமதேனு, பிறப்பிப்பவர்களிடத்து நான் மன்மதன், பாம்புகளுள் நான் வாசுகியாக இருக்கிறேன்.(28)

நாகங்களுள் நான் அனந்தன், ஜலதேவதைகளுள் நான் வருணன்,பித்ருக்களுள் நான் அரியமான், அடக்கி ஆள்பவர்களுள் நான் யமன் ஆவேன்,(29)

தைத்தியர்களுள் (கச்யபருக்கு மனைவியான திதி மூலம் பிறந்த மக்கள்)  நான் பிரஹலாதன், கணிப்பவர்களுள் காலம்,விலங்குகளுள் சிம்மம், பறவைகளுள் கருடன் ஆகவும் நான் இருக்கிறேன்,(30)

தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும் நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்.(31)

அர்ஜுனா, சிருஷ்டிப் பொருள்களுக்கு நான் ஆதி நடு அந்தமாகிறேன். வித்தைகளுள் நான் ஆத்ம வித்தை,தர்க்கிப்பவர்கள் பால் நான் வாதமாகிறேன்(32)

எழுத்துகளுள் நான் அகரம், கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு, ஓயாத காலம் நானே, எங்கும் பரந்திருந்து வினைப்பயனை வழங்குபவன் நானே.(33)

அனைத்தையும் அழிக்கும் மரணம் நான், செல்வந்தர்களின் வளர்ச் செல்வம் நான், பெண்மைகளுள் நான் புகழ். திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கிறேன்.(34)

மேலும் நான் ஸாம கானங்களில் பிருஹத் ஸாமம், சந்தங்களில் காயத்ரீ, மாஸங்களில் மார்கழி, பருவங்களில் வஸந்த காலம் நான்.(35)

வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான், தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான், வெற்றியாகவும் முயற்சியாகவும், சாத்விகர்களுடையசத்துவ குணமாகவும் நான் இருக்கிறேன்.(36)

விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன், பாண்டவர்களுள் தனஞ்செயன், முனிகளுள் வியாசர், கவிகளுள் நான் சுக்கிறன்.(37)

தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல், வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி, ரகசியங்களுள் நான் மௌனம், ஞானிகளுடைய ஞானமும் நானே.(38)

அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோஅது நான். என்னையன்றி ஜங்கம ஸ்தாவரங்களில் வாழ்வது ஒன்றுமில்லை.(39)

எதிரியை வாட்டுபவனே, என் திவ்ய விபூதிகளுக்கு முடிவில்லை.என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால் இயம்பப் பட்டது(40)

மஹிமையுமழகும் வலிவும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் பிரபையின் ஒரு பகுதியில் உண்டானது என்று அறிக.(41)

அர்ஜுனா, இதைப் பலவிதமாகப் பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன.?எனது ஓர் அமசத்தால் உலகு அனைத்தையும் தாங்கி இருக்கிறேன்.(42)

                 விபூதி யோகம் நிறைவு.  


G.M Balasubramaniam Posts    

கீதைப்பதிவு அத்தியாயம் -9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

  

கீதைப்பதிவு  அத்தியாயம் -9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

ஸ்ரீ பகவான் சொன்னது

எதை அறிந்து அசுபத்திலிருந்து விடுபடுவாயோ, அனுபவத்தோடு கூடிய அந்த ஆழ்ந்த ஞானத்தைப் பொறாமைப்படாத உனக்கு நன்கு எடுத்துரைக்கிறேன்.(1)

இந்த ஞானம் வித்தைகளுள் வேந்து;. மறைபொருளுள் மேலானது.;தூய்மை தருதலில் சிறந்தது.;கண்கூடாக உணர்தற்குரியது.;தர்மத்தோடு கூடியது.; செய்தற்கு மிக எளியது.; அழிவற்றது.(2)

எதிரிகளை எரிப்பவனே, இந்த தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்கள் என்னை அடையாது மரண சம்சார மார்க்கத்தில் உழல்கின்றனர்.(3)

அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் ஜகத் யாவும் வியாபிக்கப் பட்டிருக்கிறது.பூதங்கள் என்னிடத்து இருக்கின்றன. ஆனால் நான் அவைகளிடத்தில்லை.(4)

பூதங்கள்  ( உண்மையில் ) என்னிடத்து நிற்பவைகளல்ல.என்னுடைய ஈசுவர மகிமையைப் பார்.! பூதகணங்களை ஆக்கவும் காக்கவும் செய்கிற என் சொரூபம் அவைகளிடத்தும் இல்லை.(5)

எப்பொழுதும் எங்கும் சஞ்சரிக்கின்ற பெருங் காற்று வானத்தில் நிலை பெற்றிருப்பது போன்று பூதங்கள் எல்லாம் என்னிடத்து இருக்கின்றன என்று தெரிந்து கொள்,(6)

குந்தியின் புதல்வா, பூதங்களெல்லாம் கற்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் கற்ப துவக்கத்தில் நான் அவைகளை தோற்றுவிக்கிறேன்.(7)

என் பிரகிருதியை அருளுடையதாகச் செய்து, சுதந்திரமில்லாது அப்பிரகிருதியின் வசமாயிருக்கும் இவ்வுயிர்த்திரள்  யாவற்றையும் திரும்பத் திரும்ப நான் தோற்றுவிக்கிறேன்(8)

தனஞ்செயா, அக்கர்மங்களில் பற்றற்றவனும் உதாசீனனைப் போல் உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னை அவைகள் தளைக்க மாட்டா.(9)

குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப் பெற்று, பிரகிருதியானது, ஸ்தாவர ஜங்கம உலகத்தைச் சிருஷ்டிக்கிறது.இதன் காரணத்தால் ஜகத்தானது சுழல்கிறது.(10)

என்னுடைய பர சொரூபத்தையும் நான் உயிகளுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.(11)

வீண் ஆசையுடையவர்கள், பயன்படாச் செயலாளர்கள், கோணலறிவு உடையவர்கள், விவேக மில்லாதவர்கள். மையலூட்டுகிற ராக்ஷச, அசுர இயல்பை அடைகின்றனர்.(12)

பார்த்தா, ஆனால் மகாத்மாக்கள் தெய்விக இயல்பை அடைந்தவர்களாய், உயிர்களுக்குப் பிறப்பிடமும், அழியாதவன் நான் என்று அறிந்து, வேறு எதிலும் பற்று வைக்காது, என்னை வழிபடுகின்றனர்(13)

எப்பழுதும் என்னைப் புகழ்பவராயும், உறுதியான விரதத்தோடு முயல்பவராயும் பக்தியுடன் நமஸ்கரிப் பவர்கள் ஆகியும் நித்திய யோகிகள் என்னை உபாசிக்கிறார்கள்.(14).

ஞான  யக்ஞத்தால் வேட்பவர்களாகிய ஏனையவர்களும், என்னை ஒன்றாய், வேறாய், பலவாய்- இத்தனை விதங்களில் உபாசிக்கிறார்கள்.(15)

நானே கிரது என்ற வைதிக கருமம்;யக்ஞம் நானே; ஸ்வதாவாவது நான்;ஔஷதம் நான்;மந்திரமாவது நான்; ஹோமம் செய்யப்படும் நெய்யும் நான்; அக்கினியாவது நான்; வேட்டல் நானே.(ஸ்வதா=பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவு; கிரது=வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒரு வ்கை கர்மம் வேட்டல்=வேள்வி வேட்டல் எனும் வினையானது ஹுதம் எனப்படுகிறது)(16)

இந்த ஜகத்தின் தந்தை,தாய்,பாட்டனாரவனும் , கர்ம பலனைக் கொடுப்பவனும், அறியத்தக்கவனும், தூய்மை செய்பவனும்,ஓங்காரம், ரிக் சாமம் யஜுர் வேதங்கள் ஆகின்றவனும் நானே.(17)

புகலிடம், வளர்ப்பவன், உடையவன். சாக்ஷி, இருப்பிடம், அடைக்கலம். தோழன், ஒடுங்குமிடம், தங்குமிடம், களஞ்சியம்,அழியாத வித்து.(18)

அர்ஜுனா, நான் வெப்பந்தருகிறேன்; மழையைப் பெய்விக்கவும் தடுக்கவும் செய்கிறேன்; சாகாமையும் சாவும், ஸத்தும், அஸத்தும் நானே.(19)

மூன்று வேதங்களை அறிந்தவர்கள். யாகங்களால் என்னைப் பூஜித்து, சோம பானம் செய்து, பாபத்தினின்று விடுபட்டவர்களாகி, வானுலகு ஏகுதலை வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணியமான தேவேந்திர லோகத்தை அடைந்து சொர்க்கத்தில் திவ்யமான தேவ போகங்களை அனுபவிக்கின்றனர்.(20)

அவர்கள் அந்த அகன்ற வானுலகை அனுபவித்து, புண்ணியம் தேய்ந்தபின்பு மண்ணுலகில் புகுகிறார்கள். இங்ஙனம் மூன்று  வேத நெறிகளைப் பின் பற்றும் போக பித்தர்கள் பிறப்பு இறப்பு எய்துகின்றனர்(21)

எனக்கு அன்னியரல்லாதவராய், என்னையே நினைந்து, யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகின்றேன்.(22)

சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்கு கிறார்கள்.(23)

நானே சகல யாகங்களுக்கும் போக்தாவாகவும்( உண்பவன்) பிரபுவாகவும் (தலைவன்) இருக்கிறேன். ஆனால் பல தேவதைகளை வணங்குபவர் என்னை உள்ளபடி அறிகிறார்களில்லை. ஆகையால் அவர்கள் வழுவிப் பிறவியில் வீழ்கின்றனர்(24)

தேவர்களைத் தொழுபவர் தேவர்களை அடைகின்றனர்.பித்ருக்களைப் போற்றுபவர் பித்ருக்களைப் பெறுகின்றனர், பூதங்களை வணங்குபவர் பூதங்களைப் போய்ச் சேருகின்றனர், என்னைப் பூஜிக்கிறவர்கள் என்னையே எய்துவார்கள்.(25)

யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது நீரைப் பக்தியோடு படைக்கிறானோ அந்த தூய மனத்தானனது அன்பளிப்பை நான் (இன்புடன்) அருந்துகிறேன்.(26)

குந்தியின் புதல்வா, நீ எதைச் செய்தாலும், யாது புசித்தாலும்,ஏது ஹோமம் பண்ணினாலும். எதை ஐயமிட்டாலும், எத்தவத்தைப் புரிந்தாலும், அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்.(27)

இங்ஙனம் நன்மை தீமைகளைப் பயக்கின்ற வினைத்தளைகளிலிருந்து விடுபடுவாய், சன்னியாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையினின்று விடு பட்டு என்னை அடைவாய்.(28)

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருக்கிறேன்.எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால் என்னை பக்தியோடு பஜிக்கிறவர்கள் என்பால் உளர், நானும் அவர்கள்பால் உள்ளேன்.(29)

கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னை பஜிப்பானானால், அவன் சாது என்றே கருதப்பட வேண்டும்.ஏனென்றால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்(30)

விரைவில் அவன் அறவாளன் ஆகிறான்.நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசமடைவதில்லை என்று நன்கு அறிவுறுத்துக.(31)

பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண்பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி அடைகின்றனர்.(32)

புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களையும் அவ்வாறே ராஜ ரிஷிகளையும் பற்றிப் பின்பு பேசுவானேன்.? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னைப் பஜிப்பாயாக.(33)

மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி பண்ணி, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு.என்னைக் குறியாகக் கொண்டு உள்ளத்தை உறுதி படுத்தி என்னையே அடைவாய்.(34)

                  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் நிறைவு.    


G.M Balasubramaniam Posts    

கீதைப் பதிவு அத்தியாயம் – 8 அக்ஷரப்ரஹ்ம யோகம்

 

கீதைப் பதிவு  அத்தியாயம் – 8 அக்ஷரப்ரஹ்ம யோகம்

அர்ஜுனன் சொன்னது

ஓ புருஷோத்தமா, அந்தப் பிரம்மம் யாது, அத்யாத்மம் எது, கர்மம் என்பதுயாது, அதி பூதம் என்று சொல்லப் படுவது எது, மேலும் அதிதெய்வம் என்று எது அழைக்கப் படுகிறது.?(1)

மதுசூதனா, இந்த தேகத்தில் அதியக்ஞன் என்பவர் யார்.?அவர் எப்படி இருக்கிறார்,? தன்னடக்கம் பழகியவர்களால் மரணகாலத்திலும் நீர் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்.?(2)

ஸ்ரீபகவன் சொன்னது

அழிவற்றதாயும் மேலானதாயும் இருப்பது பிரம்மம். அதன் ஸ்வபாவம் அத்யாத்மம் ( தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ளும் குணம்) என்று சொல்லப் படுகிறது உயிர்களை உண்டு பண்ணி, நிலைத்திருக்கச் செய்தலாகிய வேள்வி கர்மம் எனப்படுகிறது.(3)

உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவனே, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்லப் படுகிறது. புருஷன்(அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக் கொண்டு இருப்பவன்)அதி தெய்வம் (ஹிரண்ய கர்ப்பன், எல்லோருக்கும் முன்பே உடலை எடுத்தவன், சுயம்பு) எனப்படுகிறான்.இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன். (ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுக்கும்போது யக்ஞம் உச்சஸ்தானம் பெறுகிறது.(4)

 மரண காலத்திலும் என்னையே நினைத்துக் கொண்டு, உடலைத் துறந்து, யார் போகிறானோ அவன் என் சொரூபத்தை அடைகிறான்,இதில் ஐயமில்லை.(5)

குந்தியின் புதல்வா, இறுதிக் காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ எப்பொழுதும் அப்பொருளைப் பாவிப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.(6)

ஆகையால் சர்வகாலமும் என்னை நினைத்துக் கொண்டே போர் புரி., மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.(7)

பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாது அப்பியாசம் எனும் யோகத்தோடு கூடிய சித்தத்தால் தேஜோமயமான பரமபுருஷனை சிந்திக்கிறவன் அப்புருஷனை அடைகிறான்.(8)

முற்றும் உணர்ந்தவனை, தொல்லோனை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவுக்கும் நுண்மையனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அக்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும் உறுதியான மனத்தோடும் யோக பலத்தோடும் புருவத்தின் மத்தியில் பிராணன் முழுதையும் வைத்து மரண காலத்தில் யார் நினைக்கிறானோ அவன் அத்திவ்விய பரம புருஷனை அடைகிறான்.(9, 10)

வேதத்தை அறிந்தவர்கள் எதை அழிவற்றது என்கின்றனர், பற்று நீங்கிய துறவிகள் எதனுள் புகுகின்றனர், எதை விரும்பி அவர்கள் பிரம்மசரியத்தைக் கடை பிடிக்கின்றனர், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்(11)

பொறி வாயில் யாவையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைத்திருந்து, “ஓம் என்கிற ஏகாக்க்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ, அவன் பரமகதியைப் பெறுகிறான்.(12,13)

பார்த்தா,வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ, அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.(14)

பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை.(15)

அர்ஜுனா, பிரம்ம லோகங்கள் வரையில் உள்ள உலகங்களுக்கு மறு பிறப்புண்டு,குந்தியின் மைந்தா, மற்று என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை.(16)

ஆயிரம் யுகம் பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், ஆயிரம் யுகம் அவருக்கு ஒரு இரவு என்றும் அறிபவர், இராப்பகலின் தத்துவத்தை அறிப்வர் ஆகின்றனர்.(17)

(பிரம்மாவின்) பகல் வரும்போது, தோன்றா நிலையிலிருந்து தோற்றங்கள் யாவும் வெளிப்படுகின்றன. இரவு வரும்போது ஒடுக்கம் என்பதனுள் அவைகள் மறைகின்றன.(18)

அர்ஜுனா, அதே இந்த உயிர்த்தொகை பிறந்து பிறந்து இரவு வரும்போது தன் வசமின்றி ஒடுங்குகிறது.பகல் வரும்போது வெளிப்படுகிறது.(19)

ஆனால் அந்த அவ்யக்த்ததைக்(தோன்றும் அனைத்தும் தோன்றாநிலைக்குப் போவது) காட்டிலும் மேலான, நிலைத்துள்ள அவ்யக்தம் ஒன்று உளது. உயிர்களெல்லாம் அழியும்போதும் அது அழிவதில்லை.(20).

அவ்யக்தம் ,அக்ஷரம் என்று சொல்லப் படுவதை பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்து (உயிர்கள்) திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.(21)

அர்ஜுனா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவை யாவும் வியாபிக்கப் பட்டும் இருக்கின்றனவோ அந்த பரம புருஷன் அனன்ய பக்தியால் (ஒரே குறியுடைய ) அடையப் படுகிறான்.(22)

பரதகுலப் பெருமகனே, எக்காலத்தில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தி அடைகின்றனரோ, எக்காலத்தில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ அக்காலத்தைச் சொல்லுகிறேன் (23)

தீ, ஒளி ,பகல், சுக்கில பக்ஷம் , உத்தராயணத்தின் ஆறு மாதங்கள் –இவைகளில் உடலை நீத்துப் போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகின்றனர்.(24)

புகை, இரவு கிருஷ்ணப்க்ஷம், தக்ஷிணாயணத்தின் ஆறு மாதங்கள்-இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவி அடைகிறான்.(25)

ஒளியும் .இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளவை என்று எண்ணப் படுகின்றன.ஒன்று பிறவாமைக்குப் போவது, மற்றொன்று பிறப்பைத் த்ருவது.(26)

இவ்விரண்டு வழிகளையும் அறிகிற எந்த யோகியும் மோகத்தை அடைகிறதில்லை.ஆகையால் அர்ஜுனா, எப்பொழுதும் யோகத்தில் நிலைத்தவனாய் இரு..(27)

இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பர நிலையை அடைகிறான்(28)

               அக்ஷரப் பிரம்ம யோகம் நிறைவு. 


G.M Balasubramaniam Posts    

 

கீதைப் பதிவு-அத்தியாயம் -7 ஞானவிக்ஞான யோகம்

 கீதைப் பதிவு-அத்தியாயம் -7 ஞானவிக்ஞான யோகம்

ஸ்ரீபகவான் சொன்னது

பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னிடத்து அடைக்கலம் புகுந்தவனாய், ஐயமற என்னை முற்றும் அறிவது எங்ஙனமென்று சொல்லக் கேளாய்(1)

விக்ஞானத்த்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்கிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை.(2)

ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மன நிறைவின் பொருட்டு முயலுகிறான்.முயலுகின்ற பெரு வாய்ப்பு உள்ளோர்களில் யாரொ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.(3)

நிலம், நீர் நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாகஎன் பிரகிருதி பிரிவு பட்டிருக்கிறது.(4)

இது என்னுடைய கீழான பிரகிருதி.இதினின்று வேறானதும், உயிர் ஆவதுமாகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. தோள்வலியோய் இந்த ஜகத் ஆனது இதனால் தாங்கப் படுகிறது.(5)

உயிர் அனைத்தும் இவ்விரண்டு பிரகிருதிகளில் இருந்து உண்டானவை என்று அறிவாயாக. நான் ஜகத் முழுவதன் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்(6)

தனஞ்செயா, எனக்கு மேலானது வேறு எதுவும் இல்லை.நூலிலே மணிகள் போன்று இவை யாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன.(7)

குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திர சூரியர் களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும்  ஓங்காரமாகவும், வானில் ஓசையாகவும், மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கிறேன்.(8)

மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9)

பார்த்தா, எல்லா உயிர்களின் நிலைபேறுடைய வித்து என்று என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும் தேஜஸ்விகளுடைய தேஜஸ் ஆகவுன் நான் இருக்கிறேன்.(10)

பரதத் தலைவா,பலவான்களிடத்துக் காமமும்(புலப்படாத பொருள் களைப் பெற விரும்புதல்) ராகமும் (புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல்) நீங்கப் பெற்ற சாமர்த்தியமாக நான் இருக்கிறேன்.உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.(11)

சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடத்துத் தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை, அவைகள் என்னைச் சார்ந்து இருக்கின்றன.(12)

இந்த மூன்று குணங்களால் ஆகிய வஸ்துக்களினால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவைகளுக்கு மேலாகிய அழியாத என்னை அறிகிறதில்லை.(13)

குணங்களால் ஆகிய என்னுடைய இந்த தேவ மாயையானது உண்மையில் தாண்ட முடியாதது.யார் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகின்றனர்.(14)

பாபச் செயலை உடையவர், மூடர், மக்களுள் கடைத் தரமானவர், மாயையினால் ஞானம் அபகரிக்கப் பட்டவர், அசுர இயல்பைப் பற்றி நிற்பவர்-இத்தகையோர் என்னைப் போற்றுகின்றதில்லை.(15)

பரதகுலப் பெருமகனாகிய அர்ஜுனா, துன்புற்றவன் , ஞான வேட்கை உடையவன் பொருளின்பம் தேடுபவன், ஞானி ஆகநான்கு விதமான அறச் செயலாளர்கள் என்னைப் போற்றுகின்றனர்.(16)

அவர்களுள் இடையறா யோகம் பூண்டு மாறாத பக்தி பண்ணும் ஞானி மேலானவன்.ஏனென்றால் நான் ஞானிக்கு மிகப் பிரியமானவன்.(17)

இவர்கள் எல்லாரும் நல்லார்களே.ஆயினும் ஞானி என் ஆத்ம சொரூபமே என்பது என் கருத்து. ஏனென்றால் யோகத்தில் நிலைத்திருப்பவனாகிய அவன் மிக உத்தமமான கதியாகிய என்னையே கடைப் பிடித்திருக்கிறான்.(!8)

பல பிறவிகளுக்குப் பிறகே “யாவும் வசுதேவ சொரூபம்என்று ஞானி வணங்கி என்னை வந்தடைகிறான்.அத்தகைய மஹாத்மா கிடைப்பதற் கரியவன். (19)

பற்பல ஆசைகளால் அறிவை இழந்தவர்கள் அவரவர் இயற்கையால் தூண்டப்பட்டு , அது அதற்கு ஏற்ற நியமத்தை கையாண்டு பிற தெய்வங்களைப் போற்றுகின்றனர்.(20)

எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன்(21)

சிரத்தையோடு கூடியவனாகிய அவன் அத்தேவதையை ஆராதித்து அதனின்று தான் ஆசைப்பட்டவைகளை அடையப் பெறுகிறான். ஆயினும் அவ்வாசைப் பொருள்களை உண்மையில் வகுத்து வழங்குபவன் நானே.(22)

ஆனால் அற்ப அறியாதவர்களாகிய அவர்கள் அடையும் பயன் அல்பமானதாகிறது. தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகின்றனர். என் அடியார்கள் என்னையே அடைகின்றனர்.(23)

என்னுடைய அழிவற்ற , ஒப்பற்ற பர சொரூபத்தை அறியாத அறிவிலிகள், புலன்களுக்கு எட்டாத என்னை புலன்களுக்குத் தென்படும் இயல்பை அடைந்தவனாக எண்ணுகின்றனர்.(24)

யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான், எல்லோருடைய அறிவுக்கும் எட்டுகிறதில்லை.பிறவாத, அழியாத என்னை இந்த மூட உலகம் அறிகிறதில்லை.(25)

அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய உயிர்களை எல்லாம் நான் அறிவேன்.ஆனால் என்னை யாரும் அறியார்.(26)

பகைவரை வாட்டுகின்ற பாரதா,விருப்பு வெறுப்பினின்று உண்டாகும் துவந்துவ மோகத்தால்(இருமை மயக்கத்தால்)  பிறக்கும்போதே எல்லா உயிர்களும் குழப்பமடைகின்றன(27)

ஆனால் புண்ணிய கருமங்களை உடைய எந்த ஜனங்களுக்குப் பாபம் முடிவடைகிறதோ, துவந்த மோகத்தில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள் உறுதியான விரதமுடையவர்களாய் என்னை வழிபடுகின்றனர்(28)

மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுவதற்கு என்னை வழிபட்டு முயற்சி செய்கின்றவர்கள் அந்த பிரம்மத்தையும் அத்யாத்மம்(ஆத்ம சொரூபம்) முழுவதையும் , கர்மம் அனைத்தையும் அறிகின்றனர்.(29)

யார் என்னை அதிபூதத்துடனும், அதிதெய்வத்துடனும், அதி யக்ஞத்துடனும் கூடினவனாக அறிகிறார்களோ,யோகத்திலே நிலை நின்ற மனதை உடைய அவர்கள் சாகும் தறுவாயிலும் என்னை அறிகின்றனர்.

                 ஞான விக்ஞான யோகம் நிறைவு.      

G.M.Balasubramaniam Posts 

கீதைப் பதிவு - அத்தியாயம் -6 தியானயோகம்

 

கீதைப் பதிவு - அத்தியாயம் -6 தியானயோகம்

ஸ்ரீபகவான் சொன்னது,

கர்ம பலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்பவனே ஸந்யாஸி,அவனே யோகி, அக்னிஹோத்திரத்தை( யாகம் செய்வதை ) நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் ஸந்யாஸி யாகான்.(1)

பாண்டவா, எதை ஸந்யாஸம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக.ஏனென்றால்  சங்கற்பத்தைத்(கர்ம பலனைப் பற்றிய கற்பனை) துறவாதவன் யோகியாவதில்லை.(2)

தியானயொகத்தில்முன்னேற விரும்புகிற முனிவனுக்குக் கர்மம் உபாயமாகிறது. தியான சித்தி அடைந்தவனுக்கோ செயல் அற்றிருப்பது உபாயமாகிறது.(3)

எப்பொழுது ஒருவன் விஷயங்களில் பற்றற்றுக் கருமத்தில் கருத்து வைக்காது எண்ணங்களை விட்டொழிக்கிறானோ அப்போதுதான் அவன் யோகாரூடன்(யோகத்தில் நிலை பெற்றவன்) எனப்படு கிறான்.(4)

தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை.(5)

தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே உறவினன்.ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போல பகைமை சூழும்.(6)

தன்னை வென்றுமனம் தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும் இன்ப துன்பங்களிலும் அங்ஙனமே புகழ்ச்சி இகழ்ச்சிகளிலும் பரமாத்ம தரிசனம் நிலைத்திருக்கும்(7)

ஞான விக்ஞானத்தில் திருப்தி அடைந்த, மனம் சலியாத, புலன்களை வென்ற, மண், கல், பொன்னைச் சமனாகக் கருதுகின்ற யோகியானவன் சமாதியில்(யோகத்தில்) உறுதி பெற்றவன் எனப்படுகிறான்(8)

நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், வெறுப்பவர், சுற்றத்தார்,சத்புருஷர், பாபிகள் ஆகியவர்களிடத்து ஒரே மனமுடையோன் மேலோன்.(9)

யோகி யாருக்கும் தென்படாது தனியனாய் இருந்து கொண்டு, உள்ளத்தையும், உடலையும் அடக்கி, ஆசையகற்றி, உடைமைப் பொருள் இலனாய் யாண்டும் மனதை ஒடுக்க வேண்டும். (10)

சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமில்லாததும், மிகத் தாழ்வில்லாததும், துணி, மான்தோல், தர்ப்பை இவைகளை உடையதுமாகிய ஆசனத்தை நன்கு அமைத்துக் கொண்டு(11)

ஆங்கு ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப் படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.(12)

தேகம் தலை கழுத்து, இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு உறுதியாயிருந்து, தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளை பாராதிருத்தல் வேண்டும்.(13)

உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தை அகற்றி, பிரம்மசரிய விரதம் காத்து, மனதை அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.(14)

இங்ஙனம் யாண்டும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கிய யோகி, என்னிடத்துள்ள முக்தியிலே முற்றுப் பெறுகிற சாந்தி எய்துகிறான்.(15)

அர்ஜுனா, அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் அது இல்லை.மிகைபட உறங்குபவனுக்கும்  மிகைபட விழித்து இருப்பவனுக்கும் யோகம் இல்லை.(16)

மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது.(17)

ஆசைகள் அனைத்திலுமிருந்து நாட்டத்தை அகற்றி, நன்கு அடக்கப் பட்ட மனது, ஆத்மாவிலேயே நிற்கின்றபோது ஒருவன் யோகத்தில் உறுதி பெற்றவன் எனப்படுகிறான்.(18)

ஆத்ம தியானம் பழகுகிற யோகியின் அடங்கிய மனதுக்கு, காற்றில்லா இடத்து வைத்த தீபம் அசையாதிருப்பது உபமானமாகக் கருதப் படுகிறது.(19)

யோகப் பயிற்சியால் எப்பொழுது சித்தம் நன்கடங்கி அமைதி பெறுகிறதோ, மேலும் எப்பொழுது ஆத்மாவால் ஆத்மாவைக் கண்டு ஆத்மாவில் மகிழ்ச்சி அடைகிறானோ,(20)

இந்திரியங்களுக்கு எட்டாததும், புத்தியினால் கிரகிக்கப் படுவதும், முடிவில்லாததும். ஆகிய எந்த சுகத்தை யோகி அறிகிறானோ, எதில் நிலைத்தபின் ஆத்ம சொரூபத்திலிருந்து அவன் அசைவதில்லையோ(21)

எதை அடைந்து, அதிலும் மிக்கதொரு வேறு லாபத்தை  நினைப்பதில்லையோ எதில் நிலைத்திருந்து பெருந் துக்கத்தாலும் அசைக்கப் படுவதில்லையோ(22)

துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்து கொள்தலே யோகம் எனப்படுவதாகத் தெரிந்து கொள்க. தளரா நெஞ்சத்துடன் உறுதுயாகத் தொடர்ந்து அந்த யோகத்தைப் பயிலுக.(23)

சங்கற்பத்தில் பிறந்த ஆசைகள் அனைத்தையும் மிச்சமறத் துறந்துவிட்டு, உள்ளத்தால் எல்லாப் பக்கங்களினின்றும் இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கிக் கொண்டு(24)

உறுதியான அறிவினாலும் ஆத்மாவின்கண் நிலை நாட்டப் பெற்ற மனதாலும் சிறிது சிறிதாக அமைதி பெறுக.வேறு ஒன்றையும் நினையாதிருந்திடுக.(25) ,

அலைவதும் நிலை அற்றதுமாகிய மனது எக்காரணத்தால் எதன் எதன் கண் திரிகிறதோ அதன் அதனிடமிருந்து  மீட்டுவித்து ஆத்மாவின் வசத்துக்குக் கொண்டு வருக,(26)

மிகச் சாந்தமான மனதையுடைய,ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, பாபமற்ற, தானே பிரம்மமான யோகிக்கே பேரின்பம்  வந்தடைகிறது(27)

இங்ஙனம் மனதை ஆத்மாவில் சதா லயிக்கச் செய்து பாபம் நீங்கப் பெற்ற யோகியானவன் பிரம்ம ஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தை எளிதில் எய்துகிறான்(28)

யோகத்தில் உறுதி பெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்திலும் , எல்லா உயிகளிடத்தும் தன்னையும் இருப்பதாக காண்கிறான்.(29)

யார் என்னை எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் என்னிடத்திலும் காண்கிறானோ அவன் காட்சியினின்று நான் மறைவதில்லை. அவனும் என் காட்சியினின்று மறைவதில்லை.(30)

உள்ளது ஒன்றே என்று உறுதி கொண்டு, எல்லா உயிர்களிலும் இருக்கிற என்னைப் போற்றும் யோகி, எப்பாங்கில் இருப்பினும் என்னிடத்து இருப்பவன் ஆகிறான்(31)

அர்ஜுனா, தன்னையே உவமையாகக்கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் எங்கும் ஒப்பக் காண்பவன் பரமயோகி எனக் கருதப்படுகிறான்.(32)

அர்ஜுனன் சொன்னது

மதுசூதனா, ‘சமமாகப் பார்த்தல் என்று தாம் புகட்டிய இந்த யோகமானது உறுதியாக நிலைத்திருக்கும் என்று அலைகின்ற என் மனதுக்குத் தோன்றவில்லை.(33)

கிருஷ்ணா, மனம் அலையும் தன்மையது, திகைக்கச்செய்வது, வலிவுடையது, திடமுடையது. அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் (34)

ஸ்ரீபகவான் சொன்னது

தடந்தோளாய், மனம் கட்டுப்படாதது அலையும் தன்மையது என்பதில் ஐயமில்லை. எனினும் , குந்தியின் மைந்தா, அப்பியாசத்தாலும் வைராக்கியத்தாலும் அதை அடக்கலாம்.(35)

மனதை அடக்கான் யோகம் அடையான் என்பது என் கருத்து. மனதை அடக்கி உபாயத்தால் முயலுபவனுக்கே அதை அடைய இயலும்.(36)

அர்ஜுனன் சொன்னது

சிரத்தை உடையவன் ஆயினும், முயற்சிக் குறைவால் யோகத்திலிருந்து மனம் வழுவியவன், யோகம் நிறைவேறாது என்ன கதியை அடைகிறான் , கிருஷ்ணா.?(37)

பெருந்தோளோய், பிரம்ம மார்க்கத்தில் மோகமடைந்தவன், பற்றுக் கோடின்றி, இரண்டிலிருந்தும் வழுவி, சிதறடைந்த மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா?(38)

கிருஷ்ணா, எனது இந்த ஐயத்தை அறவே அறுக்கத் தெரிந்தவர் நீரே. உம்மையின்றி இச்சந்தேகத்தைச் சிதைப்பவர் எவருமிலர்.(39)

ஸ்ரீபகவான் சொன்னது.

பார்த்தா அவனுக்கு இம்மையிலோ மறுமையிலோ அழிவென்பது இல்லை. நலஞ் செய்பவன் (சுப காரியம்) எவனும் நலிவுறுதல்(துர்க்கதியை, கீழ்மையை அடைவதில்லை) இல்லையப்பா.(40)

யோகப் பிரஷ்டன் புண்ணியம் செய்தவர் உலகங்களை அடைந்து, அங்கு நெடிது வாழ்ந்திருந்து செல்வம் நிறைந்த புண்ணியவான் இல்லத்தில் பிறக்கிறான்.(41)

அல்லது அறிவாளர்களாகிய யோகிகள் குலத்திலேயே (யோகப் பிரஷ்டன்) பிறக்கிறான். இது போன்ற பிறவீவ்வுலகில் பெறுதற்கரியது.(42)

குருநந்தனா, இதில் முற்பிறப்பின் யோக சாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான், மோக்ஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான்(43)

தன் முயற்சியின்றிப் பூர்வ ஜன்ம அப்பியாச வேகத்தால் அவன் யோக சாதனத்தில் இழுக்கப் படுகிறான் வெறும் யோக ஆராய்ச்சியாளன் கூட வேதத்தைக் (வேதம் சொல்லும் கர்மபலனை) கடப்பவன் ஆகிறான்.(44)

பெரும் முயற்சியுடைய யோகி, பாபங்களற்றுப் புனிதவனாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து பரகதியைப் பெறுகிறான்.(45)

தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்வி ஞானம் உடையவர்களைவிட மேலானவனாக அவன் கருதப் படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன். ஆகையால் அர்ஜுனா யோகியாவாயாக,(46)

யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்துப் பஜிக்கிறானோ, அவன் யோகிகளெல்லோர் உள்ளும் மிக மேலானவன் என்பது என் கருத்து(47)

                     தியான யோகம் நிறைவு           


G.M.Balasubramaniam Posts     

கீதைப்பதிவு அத்தியாயம்—5 ஸந்யாஸ யோகம்

 

                              கீதைப்பதிவு  அத்தியாயம்—5 ஸந்யாஸ யோகம்

அர்ஜுனன் சொன்னது

கிருஷ்ணா, கர்மத்தைத் துறக்கவும், பின்பு அதைக் கையாளவும் சொல்கின்றீர்.இவ்விரண்டிலும் சிறந்தது எது என்று நிச்சயிக்கப் பட்டதை எனக்கு சொல்லுங்கள்(1)

ஸ்ரீ பகவான் சொன்னது

கர்ம ஸந்யாஸம் , கர்ம யோகம், ஆகிய இரண்டும் சிறப்பைத் தருமெனினும் கர்ம ஸன்யாஸத்தைவிட கர்ம யோகம் மேலானது.(2)

பெருந்தோளுடையோய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய ஸந்யாஸி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகள் அற்றவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்(3)

சாங்க்யமும் யோகமும் வெவ்வேறு என்று பலரும் பகர்வர்.பண்டிதர் அங்ஙனம் பேசார்..இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டிப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்(4)

சாங்க்யர் அடையும் பேற்றை யோகியரும் அடைகின்றனர்.சாங்க்யத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்போன் உண்மை காண்கின்றான்.(5)

பெருந்தோள் படைத்தவா, கர்மயோகம் செய்யாது, கர்ம ஸந்யாஸம் பெறுதல் எளிதல்ல. கர்ம யோகம் செய்யும் முனிவனோ விரைவில் பிரம்மத்தை அடைகிறான்(6)

கர்மயோக நிஷ்டன், மனந்தெளிந்தவன்,உடலை வென்றவன், இந்திரியங்களை அடக்கியவன், தனது ஆத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செயினும் கட்டுண்பதில்லை( அதில் ஒட்டுவதில்லை) (7)

தத்துவம் தெரிந்த யோகி, பார்க்கினும் கேட்பினும், தீண்டினும், மோப்பினும், அருந்தினும், நடக்கினும் , உறங்கினும், சுவாசிக்கினும், பேசினும்,கழிக்கினும், பிடிக்கினும், கண் திறக்கினும்,கண் மூடினும், பொறிகள் புலன்களில் போகின்றன என்று உறுதி கொண்டு “நான் ஒன்றையும் செய்கிறேன் இல்லை என்று நினைப்பான்.(8,9)

பிரம்மத்தைச் சார்ந்து, பற்றுதலைத் துறந்து கர்மங்களை செய்பவன் நீரில் தாமரை இலை போன்று பாபத்தில் பந்தப் படுவதில்லை.(10)

யோகிகள் பற்றைத் துறந்து. சித்த சுத்திகாக வெறும் காயத்தாலும் ,மனதாலும், புத்தியினாலும் இந்திரியங்களாலுமே கர்மம் செய்கிறார்கள்.(11)

யோகி வினைப்பயனில் பற்றற்று, நிஷ்டையில் இருந்து உதிக்கும் சாந்தியை அடைகிறான். யோகம் செய்யாதவன், ஆசைக்கு வசப்பட்டு, பயனில் பற்று வைத்து பந்தப் படுகிறான்.(12)

தன்னை வசப்படுத்திய தேகியானவன் கர்மங்களையெல்லாம் விவேகத்தால் விலக்கி விட்டுஒன்றும் செய்யாதும், செய்விக்காதும் நவ வாயில் நக்ரில் (ஒன்பது துவாரங்களை உடைய உடலில்) இன்புற்றிருக்கிறான்.(13)

வினைத் தலைமை, வினை, வினைப்பயனைப் பெறுதல், ஆகியவைகளை இறைவன் உண்டு பண்ணவில்லை. இயற்கையே இங்ஙனம் செய்கிறது.(14)

யாருடைய பாப புண்யத்தையும் பரமாத்மா பொருட்படுத்துவது இல்லை. ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன(15)

யாருடைய அக்ஞானம் ஆத்ம ஞானத்தால் அழிக்கப் படுகிறதோ, அவர்களுக்கு அந்த ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம் பொருளை விளக்குகிறது.(16)

பிரம்மத்தில் புத்தியை வைப்பவர், அதுவே தாமாயிருப்பவர், அதிலேயே உறுதியாய் இருப்பவர்,அதையே புகலிடம் ஆக்குபவர், ஞானத்தால் பாபங்களைப் போக்கடிப்பவர் பின்பு பிறப்பதில்லை.(17)

கல்வியடக்கமுடைய  பிராம்மண னிடத்தும், பசுவினிடத்தும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் கீழோனிடத்தும் ஞானிகள் சம திருஷ்டியே வைக்கின்றனர்.(18)

மனதை சம நிலையில் உறுதிப் படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப் படுகிறது. பிரம்மம் சமநிலையுடையது, தோஷமற்றது,ஆகையால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்து இருக்கிறார்கள்.(19)

பிரம்மத்தை அறிந்தவன், பிரம்மத்தில் நிலை பெற்றவன், உறுதியான அறிவை உடையவன் மனக் குழப்பம் அடையாதவன்.பிரியமானதைப் பெற்று இன்பமடைவதும் இல்லை, பிரியமில்லாததைப் பெற்றுத் துன்பமடைவதும் இல்லை.(20)

புறப் பொருட்களில் மனம் பற்றாதவன் ஆத்மாவில் இன்பம் எய்துகிறான். பிரம்ம சமாதியில் மனதை உடைய அம்மனிதன் அழியாத சுகத்தை அடைகிறான்.(21)

இந்திரிய விஷயங்களில் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு ஏது வானவை ஆகின்றன. குந்தியின் மகனே, ஆதி அந்தமுடைய அவைகளில் ஞானிகள் இன்பமுறுவதில்லை.(22)

இம்மையில் சரீரத்தை விடுவதற்கு முன்பு காமம், குரோதம், இவைகளின் வேகத்தைப் பொறுக்க வல்லவனே யோகி. அவனே இன்பம் துய்ப்பவன்(23)

ஆத்மாவில் இன்பம் துய்த்து, ஆத்மாவில் கிரீடித்து(விளையாடி), இன்னும் ஆத்மாவில் உள்ளொளி காணும் யோகி தானே பிரம்மமாகி பிரம்ம நிர்வாணத்தை அடைகிறான்(24)

தீவினைகளைக் களைந்து, ஐயங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.(25)

விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, மனதை அடக்கி, ஆத்மஞானம் அடையப் பெற்ற ஸந்யாஸிகளுக்கு  யாண்டும் மோக்ஷம் உள்ளது.(26)

வெளி விஷயங்களை வெளியே வைத்து, கண்களைப் புருவங்களுக்கு இடையில் நிறுத்தி, மூக்கில் இயங்கும் பிராண அபான வாயுக்களைச் சமப் படுத்தி, இந்திரியம், மனம், புத்தி, இவைகளை அடக்கி, மோக்ஷத்தை நாடி, ஆசை , அச்சம், சினம், இவைகளை விட்டு முனியாயிருப்பவன் முக்தனே.(27,28)

யக்ஞம் தபசு இவைகளை அனுபவிப்பவனும் உலகனைத்துக்கும் ஈசனும், உயிர்களுக்கெல்லாம் நண்பனும் நான் என்று அறிபவன் சாந்தி அடைகிறான்,(29)

                     ஸந்யாஸ யோகம் நிறைவு.    .


G.M.Balasubramaniam Posts 

கீதைப் பதிவு -அத்தியாயம் 4. ஞானகர்மஸந்யாஸ யோகம்

  

கீதைப் பதிவு -அத்தியாயம் 4. ஞானகர்மஸந்யாஸ யோகம்

ஸ்ரீ பகவான் சொன்னது.

அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். விவஸ்வான் மனுவுக்கு மொழிந்தான். மனு இஷ்வாகுவுக்கு உரைத்தான்(1)

இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பரந்தப, காலக்கிரமத்தில் அந்த யோகம் இவ்வுலகில் நஷ்டமடைந்தது.(2)

என் பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் ஆதலால், இப்பழைய அதே யோகமானது இன்று என்னால் உனக்கு இயம்பப் பட்டது.(3)

அர்ஜுனன் சொன்னது

உன் பிறப்புப் பிந்தியது விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. தாம் அன்று அவருக்குப் பகர்ந்தீர் என்பதை யான் அறிவது எங்ஙனம்?(4)

ஸ்ரீபகவான் சொன்னது

எனக்கும் உனக்கும் அர்ஜுனா,பிறவிகள் பல கழிந்து போயின.பரந்தபா அவற்றையெல்லாம் நான் அறிகிறேன்; நீ அறிய மாட்டாய்.(5)

நான் பிறப்பற்றவன் அழிவற்றவன், உயிர்களுக்கு எல்லாம் ஈசன் எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்.(6)

பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ,அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்(7)

நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன்(8)

அர்ஜுனா, இஙஙனம் எனது திவ்வியப் பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறு பிறப்பு எய்துவதில்லை. என்னையே அடைகிறான்(9)

ஆசை, அச்சம் சினம் நீங்கியவர்களாய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞான தபசால் புனிதர்களாய்ப் பலர் என் இயல்பை எய்தினர்(10)

யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ அவருக்கு நான் அப்படியே அருள் புரிகிறேன். பார்த்தா,மக்கள் யாண்டும் என் வழியையே பின் பற்றுகின்றனர்.(!!)

வினைப்பயனை விரும்புபவர்கள் இம்மையில் தேவதைகளைத் தொழுகின்றனர்.ஏனென்றால் வையகத்தில் வினைப்பயன் விரைவில் வாய்க்கிறது.(12)

குணத்துக்கும் கர்மத்துக்கும் ஏற்ப நான்கு வருணங்களை நான் படைத்தேன். அதற்கு கர்த்தா எனினும் என்னை நிர்விகாரி  என்றும் கர்த்தா அல்லாதவனாகவும்  என்றும் அறிக(!3)

கர்மங்கள் என்னைத் தீண்டா.எனக்குக் கர்ம பலனில் ஆசையில்லை இஙஙனம் என்னை அறிபவன் கர்மங்களில் கட்டுண்டு இருக்க மாட்டான்14)

முன்னாளைய முமுக்ஷுக்களும் (முக்தியை நாடியவர்கள்) இங்ஙனம் அறிந்து கர்மம் செய்தனர்.ஆகையால் நீயும் முன்னாளில் முன்னோர் செய்தபடி வினை ஆற்றுவாயாக. (15)

கர்மம் எது, அகர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்றம் அடைகின்றனர்.எதைக் கர்மம் என்று அறிந்து ,கேட்டினின்று விடுபடுவாயோ அதை உனக்குப் பகர்வேன்(16)

கர்மத்தின் போக்கைத் தெரிய வேண்டும்.விலக்கப் பட்ட கர்மம் எது என்பது தெரிய வேண்டும்.கர்மத்தைக் கடந்த நிலையையும் தெரிய வேண்டும். கர்மத்தின் போக்கு அறிதற்கு அரியது.(17)

கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களுள் மேதாவி.அவனே யோகி, அவனே எல்லாம் செய்து முடித்தவன்(18)

எவனது கர்மங்கள் எல்லாம் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ.அவனைப் பண்டிதன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.(19)

வினைப்பயனில் பற்றற்றவனாய், நித்திய திருப்தனாய். எதையும் சாராதவனாய் இருப்பவன் கர்மத்தில் ஈடுபட்டாலும்  அவன் கர்மம் செய்கிறவன் அல்லன்.(20)

ஆசையற்றவன், மனதையும், உடலையும்  அடக்கினவன், உடைமைகளைத் துறந்தவன், வெறும் உடலால் வினையாற்றுபவன் பாபத்தை அடைவதில்லை.(21)

தற்செயலாய்க் கிடைப்பதில் திருப்தி அடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் நடுவு நிற்பவன் கர்மம் செய்தாலும் கட்டுப்படுவதில்லை (22)

பற்றிலனாய், முக்தனாய், ஞானத்தில் மனதை உறுதிப் படுத்தினவனாய் கடமையை யக்ஞமாகச் செய்பவனுடைய கர்மம் முழுதும் கரைந்து போகிறது.(23)

அர்ப்பணம் செய்தல் பிரம்மம்:;நெய் முதலிய ஹவிஸும் பிரம்மம்; பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கப் படுகிறது. பிரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்து உள்ளவனால் பிரம்மமே அடையப் படுகிறது.(24)

சில யோகிகள் தேவதைகளுக்கு யாகம் செய்கிறார்கள்,இன்னும் சிலர் பிரம்மம் ஆகிய அக்னியில் ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை ஹோமம் செய்கின்றனர்.(25)

அடக்குதல் என்ற அக்னியில் சிலர் செவி முதலிய இந்திரியங்களை ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்(26)

இன்னும் சிலர் இந்திரிய கர்மங்களையும் , பிராண கர்மங்களையும். மனதை, ஆத்மாவின் கண் அடக்குதல் என்ற ஞான ஒளி வீசும்  யோகத் தீயில் ஆகுதியாகக் கொடுக்கின்றனர்.(27)

திரவிய யக்ஞம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்வர் சிலர். தன்னடக்கமும்  உறுதியான விரதமும் உடைய மற்றவர் கற்றல் அறிதல் ஆகியவைகளை யாகமாகச் செய்வர்.(28)

அபான வாயுவில் பிராணனையும், பிராண வாயுவில் அபானனையும் (நாசியில்உட்கொள்ளும் வாயு அபானன் வெளிப்படுத்தும் வாயு பிராணன்) ஆகுதி செய்யும் சிலர், பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்து பிராணா யாமத்தில் ஈடுபடுகின்றனர்.(29)

முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனைப் படைக்கின்றனர் .யாகத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யாகத்தால் பாபத்தைப் போக்கியவர்களாம்.(30)

குருகுல சிரேஷ்டா, யக்ஞத்து எஞ்சும் அமுது உண்போர் அழியாப் பொருளாகிய பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு இவ்வுலகே இல்லையென்றால் அவ்வுலகேது.?(31)

இப்படி வேதத்தில் பல வித யாகங்கள் விவரிக்கப் பட்டிருக்கின்றன.அவை யாவும் கர்மத்தில் உண்டானவைள் என்று அறிந்து விடுதலை அடைவாயாக.(32)

பரந்தபா,(எதிரிகளை வாட்டுபவன்)பொருளைக் கொண்டு செய்யும் யக்ஞத்தை விட. ஞானயக்ஞம் மேலானது. பார்த்தா, கர்மம் முழுவதும் ஞானத்தில் முற்றுப் பெறுகிறது..(33)

பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.(34)

பாண்டவா, அந்த ஞானத்தைப் பெற்ற பின் நீ இப்படி மயக்கமடைய மாட்டாய். அந்த ஞானத்தால் எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாய்.(35)

பாபிகளில் எல்லாம் நீ பெரும்பாபியாய் இருப்பினும், பாபங்களை எல்லாம் ஞானத் தெப்பத்தால் நீ கடந்து செல்வாய்.(36)

சுடர் விட்டெரியும் தீயானது விறகுகளைச் சாம்பல் ஆக்குவது போன்று, அர்ஜுனா,ஞானக் கனல் கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.(37)

ஞானத்துக்கு ஒப்பானது, தூய்மை தரும் பாங்குடையது இவ்வுலகில் ஏதுமில்லை. யோக சித்தன் நாளடைவில் தன்னகத்தே இந்த ஞானத்தை பெறுகிறான்.(38)

சிரத்தை உடையவன் ,பரத்தைச் சார்ந்திருப்பவன்,புலன்களை வென்றவன், ஞானத்தைப் பெறுகிறான்.ஞானத்தைப் பெற்று விரைவில் மேலாம் சாந்தி அடைகிறான்.(39)

அறிவிலி, சிரத்தை இல்லாதவன் ஐயமுறுபவன் அழிவடைகிறான் .ஐயமுறுபவனுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இன்பமும் இல்லை.(40)

யோகத்தால் கர்மத்தை விட்டு, ஞானத்தால் சம்சயத்தை அகற்றி, ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனை கர்மங்கள் தளைக்க மாட்டா(தளும்ப விடாது) தனஞ்செயா.(41)

ஆகையால், அக்ஞானத்தில் உதித்த  உள்ளத்திலுள்ளா ஆத்மாவைப் பற்றிய ஐயத்தை ஞான வாளால் வெட்டி, யோகத்தைக் கைக்கொண்டு பாரதா எழுந்திரு.(42)

                ஞான கர்ம ஸந்யாஸ யோகம் நிறைவு      


G.M.Balasubramaniam Posts